Translate

Saturday 28 May 2011

லண்டனில் பாலியல் குற்றம்: இலங்கைத் தமிழரை தேடி பொலிஸ் வலை வீச்சு!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவரை வாண்ஸ்வொர்த் பொலிஸார் அதிதீவிரமாக தேடி வருகின்றனர். 

இவர் 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்கும் 2010 ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நடுச் சாமத்தில் மூன்று பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார். 

இப்பாலியல் குற்றவாளியை கண்டுபிடிக்கின்றமைக்கு லண்டனில் வாழும் தென்னாசிய சமூகத்தினர் உதவ வேண்டும் என்று வாண்ஸ்வொர்த் பொலிஸார் கோரி உள்ளனர். 

நெருக்கமான உறவினர்கள் இவரை மறைத்து வைத்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர். 

இவரை ஒளித்து வைத்திருக்கின்றமை உறவினர்களுக்கு பேராபத்தில் முடியலாம் என்றும் இவர் அடுத்து வரும் நாட்களில் தாய், மகள், சகோதரி போன்றவர்களைக்கூட வல்லுறவுக்கு உட்படுத்தக் கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்து உள்ளனர்.


தமிழனைக் கொன்று கடைசியில் தமிழையே கொல்லும் பரதேசிப் பாதுகாப்பு அமைச்சு!

முள்ளிவாய்காலில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை கொத்தோடு கொத்தாக ஆயிரக்கணக்கில் கொன்றொளித்த இலங்கை இராணுவம் கடைசியில் அவர்களால் உயிராகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி மீதே கை வைத்துள்ளது.. 

தமிழர்களைக் கொன்று விட்டோம் என்ற இறுமாப்பில் தமிழ் மொழியையும் கொல்லும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சு என்று தங்களைக் தாங்களே கூறிக் கொள்ளும் அடி முட்டாள்கள். 

தமிழனைக் கொன்றவர்கள் தமிழைக் கொல்வது ஒன்றும் முதன் முறையல்ல.. புலம்பெயர் தேசங்களிலிருந்து தங்கள் சொந்தங்களைப் பார்க்க வடக்குக்கு செல்லும் எமது உறவுகளுக்கு விசேட அனுமதி தொடர்பான நிபந்தனை விதித்து, வடக்கை தாங்களே இன்னொரு தேசமாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்தது போல அதனுள் நுழைவதற்க்கான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ................ read more

பழைய காயங்களை கிளறி இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் - மகிந்தா ராஜபக்சே...! ஏது பழைய காயங்கள்...? ஏது புதிய காயங்கள் ..?

  • யார், என்ன சொன்னாலும் தமிழர்களுக்கு இப்பொழுது வழங்கியுள்ள அதிகாரங்களே போதுமானது என்று சொல்கிறார் மகிந்தா ராஜபக்சே. 
  • அடங்க மறுக்கும் மகிந்தா ராஜபக்சே கோஷ்டியினரும், அடக்க துடிக்கும் இந்திய அரசுக்கும் மோதல் முற்றி வருகிறது.
  • என்ன செய்யப் போகிறது காங்கிரஸ் பெருச்சாளிகளின் அரசு..?



போர்க் குற்றங்களுக்கு தண்டனை, விசாரணை என்பதிற்குப் பதிலாக, அரசியல் உரிமைகளை  ஏதோ சொல்லிக் கொள்ளும் உரிமைகளையாவது போராடி பெற்று விடலாம் என்று தில்லி சர்க்கார் நினைக்க,  கரடியின் கைகளை கெட்டியாப் பற்றிக் கொண்ட கவுண்டமணியின் நிலைமையே நீடிக்கிறது.    ............. read more

தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்ற கவலைகள் ஈழத்தமிழர்களிடம் உண்டு: சூரியநாராயணன்

நாலாவது ஈழப்போரில் தமிழ் மக்களை இந்திய அரசு குறிப்பாக தமிழக அரசு காப்பாற்ற முற்படவில்லை என்ற கவலைகள் ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் பதிந்துள்ளது.
 உலகில் உதவிகள் அற்று கைவிடப்பட்ட இனமாக தமது இனம் இருக்கின்றது என்ற ஏக்கங்களை அவர்களின் கண்கணில் காண்டுகொண்டேன் என இந்தியாவைத் தளமாகக் கொண்ட தென்ஆசிய ஆய்வுக்குழு என்ற இணையத்தளத்தில் எழுதியுள்ள ஆய்வுப் பத்தியில் பேராசிரியர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:.......... read more

தமிழர்களின் நல்லூர் ராசதானியைக் குறிவைக்கும் சிங்களம்: இன அழிப்பின் உச்சம் !

யாழில் பல்வகையான மறைமுக இன அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இலங்கை இராணுவம், தற்போது யாழ்ப்பாண இராசதானியின் பழைய தலைநகர் நல்லூரை குறி வைத்துள்ளதாக யாழ்ப்பணத்தில் உள்ள செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிங்கள வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் நல்லூர் கந்தசாமி கோவிலின் சுற்று புறத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவம் மேற்படி கோவிலின் சூழலில் மக்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காகவும் ஊரடங்கு சட்டத்தை போன வார இறுதி நாட்களில் அமுல்படுத்தி உள்ளது எனவும் அறியப்பட்டுள்ளது......... read more

சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம்


  • 1970 களிலும் 1980 களிலும்   தென்னாபிரிக்கா நாட்டின்  தேசிய அணிகளை உலகம் புறக்கணித்தது25 ஆண்டுகளுக்கு பின்பு தான் அவர்களின் தேசிய அணி வெளி உலகத்திற்கு வந்தார்கள். 
  • இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்  துடுப்பாட்ட வாரியம் சிம்பாவே நாட்டின் தேசிய துடுப்பாட்ட அணியுடனான தனது அனைத்து உறவுகளையும் 2008 ஆம் ஆண்டு நிறுத்தி கொண்டது
இவையாவும்ஏன் நடைபெற்றது
அந்த நாடுகளின் மனித உரிமைகளை நிலை நாட்ட அனைத்துலகம் மேற்கொண்டமுயற்சி ஆகும் இதில் பிரித்தனியாவின் பங்கு முக்கியம் பெற்றது அதேபோல் இலங்கை அரசிற்குஅழுத்தம் கொடுக்க எமது கடமைகளை நாம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போது உள்ளோம்.இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கின்றோம்புறக்கணிப்பு போராட்டம் சம்மந்தப்பட்ட அனைத்து தொடர்புகளும் எமதுஇணைய தளத்தில்(www.tuouk.org) கிடைக்கும்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்நாட்டு அதிபரான அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் விளைவாக அங்குள்ள தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
குறிப்பாக தலைநகர் சானா அருகே உள்ள ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்தியாவுக்கு நாம் மரணத்தை வழங்குவோம் – கொழும்பு எச்சரிக்கை

சிறீலங்காவின் படை நடவடிக்கைக்கு இந்தியா உதவியபோதும், அவர்கள் அந்த உதவிக்காக எதிர்பார்ப்பது அதிகமானது. அவர்கள் செய்த உதவிக்கு நன்றியை மட்டும் தெரிவித்து சிறீலங்கா விலகமுடியாத நிலையில் உள்ளது.

சிங்கள மக்களின் ஒற்றுமை இந்தியாவுக்கு சவாலானது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினால் தென்னிலங்கையில் 60,000 மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவால் நாம் சிந்திய குருதி கொஞ்சமல்ல. மீண்டும் மீண்டும் எங்களை இரத்தம் சிந்த அவர்கள் வைக்கலாம். ஆனால் மரணம் மெல்ல மெல்ல வரும் என்பதை இந்தியாவும், பீரீசும் உணரவேண்டும் என கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

நேற்று (24) வெளியிடப்பட்ட அதன் ஆய்வுச் செய்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு.......... READ MORE

மனித உரிமை மீறல் : உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: படையினரிடம் மகிந்த உறுதி

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே நேற்று உறுதியளித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று தனது உரையில் கூறியது:............ READ MORE

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்பு ஆடியோ இணைப்பு !


நடிகர் ரஜினி சிறுநீரக சிகிச்சைக்காக இன்றிரவு சிங்கப்பூர் செல்கிறார்.
ஆரம்பத்தில் லண்டனுக்கு சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வளவு தூரம் போவதற்குப் பதில் அருகாமையில் இருக்கும் சிங்கப்பூரிலேயே அதி நவீன வசதிகள் நிறைய கிடைப்பதால் அங்கு செல்லலாம் என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு மருத்துவ சிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார். மனைவி, மகள், மருமகன்கள் உடன் புறப்பட்டுச் சென்றனர். அவர் புறப்பட்டுப்போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக்காத்திருந்தனர்.    ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது............. read more

கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம் - விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம்


2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.
எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில்  அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்................ read more

Friday 27 May 2011

முதல் முறையாக ஐரோப்பியப் பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்

முதல்முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் !

யூன் 1ம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம் மாநாட்டில் போல் மேர்ஃபி (ஐரோ.நா.ம.உ) உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளுகின்றனர்.


குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனாரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது. 


ஒரு மணித்தியாலம் 240.000ரூபாய்களை தமிழர்களை அழிக்க செலவழித்த இலங்கை அரசு .


இலங்கையில் இறுதி யுத்தம் நடை பெற்று கொண்டிருந்த போது தமிழர்களை அழிக்க இலங்கை
பவுத்த பேரினவாத சிங்கள அரசு ஒரு செகண்டுக்கு நாலாயிரம் ரூபாய்களை செலவழித்துள்ளது
என லக்ஷ்மன்  யப்பா  அபெய்வர்டென .தெரிவித்துள்ளார் .
இலங்கையில் பட்டினியால் பல்லாயிரம் மக்கள் தவிக்கையில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த சிங்கள அரசுகள் மக்கள் வரிப்பணத்தினையும் உலக நாடுகளிடம் இலங்கையை அடகுவைத்து தமிழர்களை அழித்தொழித்துள்ளது குறிப்பிடத்தக்கது ......... READ

முள்ளிவாய்காலில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை குழப்பிய யாழ் மாநகர (தமிழ்)முதல்வர்!


வழமைக்கு மாறாக மாநகரசபைச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு கூச்சல்கள் குழப்பங்கள் மத்தியில் நேற்று மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ் மாநகரசபை மாதாந்த பொது கூட்டம் நேற்று நடைபெற்றபோது ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி, ஈ.பி.டி.பி.யின் மாநகரசபை உறுப்பினர்கள் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்துவதை குழப்பும் வகையில் மேசைகளில் தட்டியும், கூக்குரலிட்டவண்ணம் இருந்தனர். இதே நேரம் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கூட்டம் முடிந்ததாகக் கூறி வெளிநடப்புச் செய்துள்ளார்.

தமிழர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிட அனுமதிக்க மாட்டோம்! அதை நாமே தீர்த்து வைப்போம் – யுத்த வெற்றி விழாவில் மஹிந்த


இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். அது உள்வீட்டுப் பிரச்சினை. அதை நாமே தீர்த்து வைப்போம். பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதைக் வழங்க நாம் தயாராக இல்லை – என்று யுத்த வெற்றிவிழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் இரண்டாம் வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாவில் மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே ஜனாதிபதி மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு பேசியவை வருமாறு -

போரில் கொல்லப்பட்ட மக்களது சடலங்கள் இராணுவத்தால் அகழப்பட்டு எரிக்கப்படுகின்றன!

போரின் போது வன்னியில் கொல்லப்பட்ட மக்களது எலும்புக்கூடுகளை அகழ்ந்து எரித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் தீவிரம் பெற்ற 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதிகளில் புதுமாத்தளன், மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் செறிந்துவாழ்திருந்தனர்.

Thursday 26 May 2011

ப.நடேசனை சுடச் சொன்னர் கோத்தபாய: இதனை நேரில் கேட்ட பிரசன்ன தப்பியோட்டம் !

சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் ஊடகவியலாளர் பிரசன்ன ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராஜபக்ஷ பிரசன்னாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார். 


அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் இவர் நேபாளத்திற்கு சென்றுள்ளார் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து பின்னர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் பிரசன்ன. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். இவ்விருவருக்கும் அரசியல் தஞ்சம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.................. read more

வன்னியில் பாரிய படைத்தளம் – மாவீரர் துயிலுமில்லம் அழிப்பு


வடபகுதியில் மிகப்பெரும் படைத்தளங்களை அமைத்துவரும் சிறீலங்கா படையினர் அங்குள்ள மக்களின் குடியிருப்புக்களையும், மாவீரர் மயானங்களையும் அழித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் உள்ள ஈச்சங்குளம் பகுதியில் பாரிய படைத்தளம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேபி மீண்டும் இன்ரப்போல் பட்டியலில்!

நோர்வேயில் புலிகளின் தலைவர் நெடியவன் கொலன் நாட்டு போர் குற்ற விசாரனை பிரிவினரால் விசாரிக்கபட்டதை தொடர்ந்து கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் றாஜீவ் காந்தியைப் புலிகளே கொன்றனர் என்று அதிரடி அறிவிப்பு செய்திருந்த நிலையில் கேபியின் தகவல்கள் இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் மீள் பதிவு செய்யபட்டுள்ளன.
கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனின் சொந்த கிராமம் மற்றும் அவருடைய பிறந்த திகதிகளுடன் மீள் பிரசமாக இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கபட்டுள்ளது.

சரணடைய வருகின்றவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன்! சரத் பொன்சேகா



வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை இராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாகவே நான் கேள்விப்பட்டிருந்தேன். .............. read more

அதிரும் சிங்களம் இணைவார்களா தமிழர்கள்? – இதயச்சந்திரன்

பேரினவாத சிங்கள அரசுகளால், ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்புத்தான் என்கிற வகையில் அமைந்துள்ளது,…
 …கசிந்துவரும் ஐ.நா.நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை. சிறீலங்கா அரசினால், தமக்குச் சார்பான ஊடகங்களினூடாகக் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பக்கங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்

இந்த அறிக்கையை மகிந்த ராஜபக்ச அரசு, ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியதன் சூத்திரத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதை வெளியிடுவதனூடாக சிங்கள மக்களை இதற்கெதிராக அணிதிரட்டலாம் என்பதுதான் மகிந்தரின் திட்டம். அரசின் மந்திரி பிரதானிகள், பௌத்த, கத்தோலிக்க மதகுரு தலைவர்கள் இவ்வறிக்கையினைப் பார்வையிட்ட பின்னரே, கண்டன அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள்.

இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமரை சந்திக்கிறார் ஜெயா

  இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணிநடந்துகொண்டிருக்கிறது. 

இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து பேசுவீர்களா?' என்று கேட் டதற்கு, பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு கஷ்டங்களைச் சுமந்து வாழும் பூம்புகார் மக்கள்


  யாழ்ப்பாணம் / அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் 16 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். J/90 கிராமசேவகர் பிரிவைக் கொண்ட இக்கிராம மக்கள் மீள்குடியேற்றப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ............ READ MORE

வீரப்பன் சமாதியில், தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை வீரப்பன் மனைவி பெற்றுக் கொண்டார்

வீரப்பன் சமாதி அமைந்துள்ள மூலக்காட்டில் (மேட்டூர், தமிழ் நாடு), தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை மனிதம் வெளியீட்டார் அக்னி சுப்பிரமணியத்திடமிருந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின் அன்மையில் சிறையிலிருந்து விடுதலையான வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெற்றுக் கொண்டார். (24.05.2011).

அரச கைக்கூலி கேபி இன் கூற்றை நம்பவேண்டாம்: நெடுமாறன் ஐயா


Nedumaran
எம்.ஜீ.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் திட்டம் தீட்டியதாக விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாதன் .......... READ MORE

தெற்கில் நடப்பது யுத்த கொண்டாட்டம் அல்ல கொடூரத்தின் குதூகலிப்பு


சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட, மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையென்று அது கூறிக் கொள்ளும்வன்னியில் நடந்த தமிழினப் படுகொலை யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கழிந்து விட்டன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை எத்தனை வருடங்கள்தான் சென்றாலும் அந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்கள் பட்ட துன்ப, துயரங்கள், இழந்த உறவுகள், இழக்கப்பட்ட அவயங்கள் இவையனைத்தும் மாறாத வடுக்களாகவும் ஆறாத துயரங்களுமாகவே தொடருகின்றன. வன்னி நிலப்பரப்புக் கூட இன்று மயான பூமியாகவே காட்சியளிக்கிறது. சில இடங்கள் இன்றும் ஜப்பானிய ஹிரோஷிமா நகரத்தையே நமக்கு ஞாகப்படுத்தும். யுத்தத்தின் மூர்க்கம் அங்கு பல அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! - என்ன செய்யப்போகிறோம் நாம்?


மே 18 சிறிலங்கா அரசால் தமிழீழ மக்கள் மேல் 1917லிருந்து ஆரம்பிக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்ட நாள், உலக புவியியல் அரசியலில் சில உலக நாடுகள் தமது சொந்த நலம் கருதி, தமிழ் மக்களின் அழிவை கண்டும் பார்வையாளர்களாக இருந்த நாள்.

ஆகஸ்ட் 6. 2006 ல் மூதூரில் பிரெஞ்சு மனித நேய அமைபிற்கு தொண்டர்களாக தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்த 17 தமிழீழ மக்கள் தொண்டர்கள் சிறிலங்கா இராணுவத்தால் ஒவ்வொருவராக தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள்...... READ MORE

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களின் அணிவகுப்பிலிருந்து தமிழ் பொலிசார் விரட்டியடிப்பு


யுத்த வெற்றியின் இரண்டாம் வருட நிறைவை முன்னிட்ட கொண்டாட்டங்களின் அணிவகுப்பில் கலந்து கொள்ளவிருந்த தமிழ்ப் பொலிசார் யாழ்ப்பாணத்துக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றியை கொண்டாடும் நிகழ்வில் பொலிஸ் அணிவகுப்பிற்கு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அவசியமில்லை என்று கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்............ READ MORE

புதுவை, பாலகுமார் பேபி ஆகியோர் எங்கே ? GTF -BTF- TGTE கேள்வி கேட்குமா ?

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த புதுவை ரத்தினதுரை, யோகி, பாலகுமார் மற்றும் பேபி சுப்பிரமணியம் ஆகியோர் எங்கே. இதுவரை அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இலங்கை அரசால் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்லாது தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் போராளிகளினுடைய பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை தமிழ் அமைப்புகளான GTF, BTF மற்றும் நா.க.அரசாங்கம் என்பன வெளியிடச் சொல்லிக் கோரிக்கை விடுக்குமா ?


போர் குற்றம், இன அழிப்பு என்பன குறித்து கவனம் செலுத்திவரும் இவ்வமைப்புகள், போராளிகளின் விடுதலை குறித்து பேசாவிட்டாலும், தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேசத்துக்கு கொடுக்க முயலவேண்டும்...........  read more

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்


“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”
– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.
நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’,.......... read

போர்க்குற்றம் – இனப்படுகொலைகளுக்காக கைதுசெய்யப்பட்டார்!


1990ஆம் ஆண்டு பொஸ்னியாவில் நடைபெற்ற போர்க்குற்றத்திற்காக செர்பியன் படையனிகளின் முக்கிய பதவி வகித்தவரான ராட்கே மிலாடிக் என்பவரே செர்பியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7500 முஸ்லிம் ஆண்கள் மற்றம் இளைஞர்களை இவர் படுகொலை செய்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7500 பேரை கொலைசெய்யப்பட்டது இனப்படுகொலையாகவும் போர்க்குற்றமாகவும் அறிவிக்கப்பட்டே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செர்பிய அதிபர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதோடு கைதுக்கு உதவிய தனது படையணி வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.............. read

Wednesday 25 May 2011

மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்!

கல்விச் செயற்பாடுகளில் முன்னிலையில் இருந்துவரும் யாழ்குடாநாட்டில் இன்று எழுத்தறிவு குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
 காலம் காலமாக நாம் பேணிவரும் தமிழர்களுக்குரிய அடையாளங்களும் சிங்களத்தால்திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் முற்றாக சூறையாடப்பட்டு வருகின்றன. 
தமிழர் தாயகப்பகுதி எங்கும் சிங்களத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

பிரயோசனமற்ற அலங்கார அமைப்பே செனற் சபை

  • இன்றைய இளம் பரம்பரையினருக்குச் செனற் சபை புதிய விடயமாகத் தோன்றலாம்.
  • அது ஏற்கனவே நடைமுறையில் இருந்து கைவிடப்பட்டது. 
  • சோல்பரி அரசியலமைப்புடன் செனற் சபை நடைமுறைக்கு வந்தது.



செனற் சபையை அமைப்பது பற்றி அரசாங்கம் ஆலோசனை தெரிவித்திருக்கின்றது.ஜனாதிபதி அடிக்கடி கூறிவரும் "பதின்மூன்றாவது திருத்தம் பிளஸ்'இதுதான் என்கிறார் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல.

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை சம்பந்தன் தரும் விளக்கம்

sammanthan1தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கூடுதலான அளவுக்கு இந்தியாவிடமும் அமெரிக்காவிடமுமே நெருக்கமாகத் தொடர்புகளை வைத்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றைய தினம் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்: கரு ஜயசூரிய _

  பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடுமெனவும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகள் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு: 75% மக்கள் ஆதரவு-வைகோ

சிவகாசி: சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுக 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்: கருணாநிதி

சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 7


இலங்கையில் போர் முடிந்த பின்னரும் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை!
இவற்றை மிகவும் கவனமாக நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆய்வு செய்தோம். குறிப்பாக, 'சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பாக நடந்த சம்பவங்கள் எவை?’ என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்தோம்.

ராஜபக்ஷே, சோனியா உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவது விரைவில் நடக்கும்! - வேலூரில் சீமான் ஆவேசம்


ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு. இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை சர்வாதிகாரமாக அடக்கியாள முற்படுகின்றார்: பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில்


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொண்டு அடக்கியாள முற்படுவதாக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில் குற்றம் சாட்டுகின்றார்.

முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முற்படுகின்றார் என்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுில் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட்

பிரித்தானிய ஆளும் Conservative கட்சியின் யூத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.

இதுவரை போர்க்குற்றம் பற்றி பேசிவந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது இனப்படுகொலை பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பாரிய இராணுவ முகாம்!

வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் விதைக்கப்பட்ட 800 மாவீரர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டு இந்த முகாம் அமைக்கப்படுவதாக அவர்களின் உறவினர்கள்,  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கவலையுடன் முறையிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்

முதலமை‌ச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்'' எ‌ன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.


மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமை‌ச்சர் எடுப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் மத்திய அரசின் உளவுத்துறை, குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது.