Translate

Saturday 6 August 2011

'' ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

கருணாநிதி குடும்பத்தாரின் சொத்து கணக்குகள் ஜுனியர் விகடனில் வந்துள்ளது (செய்தி உபயம் திரு.kovai bala .s ) இதய பலஹீனமானவர்கள், கர்ப்பினிகள், குழந்தைகள், ஏழைகள், வயிற்றெரிச்சல்காரர்கள்,..... மற்றும் உயர் ரத்த அழத்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்... பின் விளைவுகளுக்கு, கலைஞரின் குடும்பம் பொறுப்பல்ல...
ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! .............. read more 

Seeman Video Talk For Naam Tamilar Canada

Prof. Kalyanasundaram Speech - Naam Tamilar

Enfield Nagapoosani Amman Temple Festival - Ther (31.07.2011)


Enfield Nagapoosani Amman Temple Festival - Ther (31.07.2011) 


மூதூர் படுகொலைகள் குறித்து விசாரணை மீண்டும் இடம்பெறாது! -இலங்கை அரசு திட்டவட்டம்


இலங்கையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் ஏ.சி.எஃப். தொண்டு அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை மீண்டும் இடம்பெறாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அப்போது கொலை செய்யப்பட்ட 17 பேரில், 16 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம். அவர்கள் அனைவரும் ஏ.சி.எஃப். எனும் பிரெஞ்ச் தொண்டு அமைப்பின் பணியாளர்கள். அவர்கள் சுனாமிக்கு பிறகான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.............. read more 

கொடிய நோயினால் சோனியா அவதி!அமெரிக்காவில் அவசர சிகிச்சை.

சோனியாகாந்தியின் உடல் நலம் குறித்து பல் வேறு செய்திகளும் கசிந்துள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியே சோனியாகாந்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும். அவரால் இயல்பாக இருக்க முடியாத அளவுக்கு அவதிப்பட்ட நிலையில் சோனியாவை பரிசீலித்த டில்லி மருத்துவர்கள். மிகவும் கவலையடைந்துள்ளனர்............... read more 

ஆபத்தான பகுதிகளை துப்பரவு செய்ய போராளிகளை பயன்படுத்துகிறது சிங்களப்படை.

இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து தொழிற் பயிற்சி மற்றும் தொழில்களை வழங்குவதாகக் கூறி வரும் சிறிலங்கா அரசானது இப்போது அந்த முன்னாள் போராளிகளைக் கொண்டு குளங்களையும் குட்டைகளையும் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்து வருகிறது............ read more 

புலிகளை ஒழித்துவிட்டோம்! இனித் தீர்வு தேவையில்லை! கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவிப்பு


இலங்கையில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இவ்வாறு  பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்................ read more 

யாழ். குடாநாட்டில் ‘ஓம்’ ஆன்மிக தொலைக்காட்சி!!


யாழ். குடாநாட்டில் ‘ஓம்’ ஆன்மிக தொலைக்காட்சி!!

ஓம் ரீ.வி. என்ற பெயரில் புதிய ஆன்மீக தொலைக்காட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ். குடாநாட்டை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தொலைக்காட்சியானது முழுமையாக ஆன்மீகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சித் தொகுப்புகளையும்  தாங்கியதாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன................ read more    

ஜேர்மனில் பரிசுபெற்ற ஈழத்தமிழ் மாணவி


ஜேர்மனில் பரிசுபெற்ற ஈழத்தமிழ் மாணவி

ஜேர்மனி தேசத்தில் அண்மையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி செல்வி சரிகா சிவநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.................. read more 

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு


போர் குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு-ஜகத் டயஸ் சுவிஸிக்கு வரும் போது கைது செய்யப்படலாம்
இலங்கை ராஜதந்திரியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் கூறியுள்ளதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது................ read more 

தமிழின அழிப்பு: வைகோ தயாரித்துள்ள ஆங்கிலக் குறுவட்டு வெளியீடு

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை இன அழிப்புச்செய்த சிங்கள இராஜபக்சே அரசின் கொடூர முகத்தை,இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும்,மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும், உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு வரும்வகையில், Geneocide of Eelam Tamils : Hearts Bleeஎன்ற ஆங்கிலக் குறுவெட்டை வைகோ தயாரித்து உள்ளார்................... read more 

இலங்கை: கோத்தபாயவை பிரதமராக்க ராஜபட்ச முடிவு?


கொழும்பு, ஆக.5: எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபட்சவை பிரதமராக நியமிக்க இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன................. read more 

கேணல் ரமேஷை படையினர் கைது செய்யவில்லை – கோதபாய :

இலங்கையில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் அரசியலமைப்பு ஒன்று இருப்பதாகவும் அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும் எனவும் ஏனெனில் வடக்கு கிழக்கில் இப்போது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்............... read more 

தமிழர் தரப்புடன் பேச்சு வார்த்தை தொடர வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா.


தமிழர் தரப்புடன் பேச்சு வார்த்தை தொடர வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா.
பரபரப்பான சூழலுக்கிடையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தானாக முன் வந்து இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்று வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்திருப்பது அரசியல் தீர்வுக்கான ஒரு வாய்ப்பாகவே இந்தியா கருதுகிறது. ஒன்றுபட்ட நாடு என்ற வரையறைக்குள் தமிழர்கள் உள்பட அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்..................... read more 

பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு மீள் தேர்தல் ..!


பிரான்ஸ் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொண்ட தேர்தலின்  போது
முறைகேடாக நடை பெற்ற தேர்தல் தொகுதிகள் இரத்து செய்ய பட்டு மீள் தேர்தல் நடை பெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
 
பிரான்ஸ் 92. 93. 75பகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது .
 
திருசோதி.சிவகுரு பாலசந்திரன் சாலினி அவர் கணவர் மற்றும் சிலர் நின்ற தொகுதிகளிலேயே 
இந்த முறைகேடுகள் நடை பெற்றன .   
இதனை அடுத்தே இந்த பகுதிகளில் விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கூட்டமைப்பின் 10 வது சுற்றுப்பேச்சு நிபந்தனையுடன் முடிந்தது! மூன்று முக்கிய நிபந்தனைகள்!! ஏமாற்று அரசியல் இன்னும் முடியவில்லை!!!

சமஷ்டி அமைப்பின் கட்டமைப்பு , மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதியதிகாரங்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் இரண்டு வாரத்தில் தெளிவாக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, கூட்டமைப்பு கடும் விமர்சனத்தையும் கவலைகளையும் வெளியிட்டுள்ளது................ read more 

இராஜீவ் கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ..

இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் அடுத்தடுத்து வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி'. மற்றொன்று, களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு.............. read more 

பிரித்தானியாவில் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 2011.



மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா பிரித்தானியாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது.
வருடாந்தம் பிரித்தானியாவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா இவ்வருடம் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவாக தாயக நினைவுகளையும், தாயகத்தில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாவை ஒத்ததாகவும் நடைபெறவுள்ளது.............. read more 

தனித் தமிழீழம் அமைய வேண்டி அர்ஜீன் சம்பத் அமர்நாத் புனித யாத்திரை.




இராவணணின் இராச்சிய லட்சுமி இமயத்தில் இருந்து மீண்டும் ஈழம் சென்றால் தனித் தமிழீழம் நிச்சயம் உருவாகும் � அர்ஜூன் சம்பத் பயணக்கட்டுரை கடந்த 23ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பாக தனித் தமிழீழம் உருவாக அமர்நாத் புனித யாத்திரை மாநிலத் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக கோவையில் இருந்து புறப்பட்டது................. read more 

சிறீலங்கா மீதான சுயாதீன விசாரணைக்கு கனடா ஆதரவு


சிறீலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு பரிந்துரைத்தவாறு, சுயாதீன விசாரணை ஒன்று இடம்பெறுவதற்குக் கனடா ஆதரவளிப்பதாக கனேடிய அரசு அறிவித்துள்ளது.
கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட்டின் பேச்சாளர் கிறிஸ் டே (Chris Day) இதனைத் தெரிவித்தார்.............. read more 

மகிந்தரை விமர்சித்தார்கள் என 12 மாணவர்கள் கைது !

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையிலுள்ள தொழில்நுட்பக் கல்லுரியில் கல்விகற்கும் 12 மாணவர்கள் நேற்று கொம்பனித் தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் உயர் கல்வி அமைச்சரையும் விமர்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.......... read more 

ஈழத்தில் ஒரு லட்சம் விதவைகள். போர் நடந்த இடத்தை பார்வையிட்டு திரும்பிய பிரிட்டோ பேட்டி

‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்’’


ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும்  பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம்.

Friday 5 August 2011

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் பொய் என்று கூற சிறைக் கைதிகளாக உள்ள சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவிமாரை நிர்ப்பந்திக்கும் அரசு


பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வருடம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டுவரும் இலங்கை அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை போலியாக்க இலங்கை அரசிடம் கைதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவியையும் முன்னாள் அரசியல் துறைப்பொறுபாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவியையும் வைத்து சாட்சியமளிக்க அரசு முயன்றுள்ளது.............. read more 

16வது தமிழர்விளையாட்டுவிழா


பிரித்தானிய தமிழர் விளையாட்டுத்துறையால் வருடாவருடம் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டுவிழா எதிர் வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 16வது தமிழர்விளையாட்டுவிழா மாவீரர் ஞாபகார்த்த சுற்றுப்போட்டியாக Richard Evans Memorial Playing Fields, Roehampton Vale, Putney, London SW15 3PQ
எனுமிடத்தில் நடைபெறவுள்ளது

கே.பி அவர்களே நீங்கள் பேரினவாதத்தின் கைதி அல்லது தமிழர்களின் துரோகி!


கே.பி அவர்கள் மற்றும் அவர்களுடைய தீவிர ஆதரவாளர்களுக்கும் குழம்பி இருப்போருக்கும் இச் செய்தியை தெரிவிக்கின்றோம்.
கே.பி அவர்களை பொருத்தவரை இரண்டு விடயங்கள் மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.
ஒன்று அவர் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது, அது உண்மையென்றால் அவர் கைதி!.................. read more 

தமிழ் கூட்டமைப்புக்கு அரசு எழுத்து மூல பதிலை வழங்கும்- அமைச்சர் வாசுதேவா நம்பிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின்படி அரசு  எழுத்து மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும். எனவே, அரசு   கூட்டமைப்பு பேச்சுகள் முறிந்து விட்டது எனக் கூறமுடியாது என்று  தேசிய மொழிகள் இன, நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்தார்............. read more 

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம்- பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்!

‘முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம். இறுதியில் எங்களுக்கு நீதி கிடைக்கும்’ என நம்பிக்கை வெளியிடுகிறார் வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் (ஆ.ர்)............. read more 

சோனியாவின் அடிவயிற்றில் புற்றுநோய்: தமிழர்களின் சாபமா ?

தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கும், ஆனால் சோனியா விடையத்தை வைத்துப் பார்த்தால், நாத்திகனும் நம்புவான் கடவுளை. சரி விடையத்துக்கு வருவோம். டெல்லியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று இரகசியமாகப் புறப்பட்டு அமெரிக்கா நோக்கிப் பறந்துள்ளது............ read more

சங்கிலிய மன்னன் சிலையில் உள்ள வாளின் மர்மம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? (படங்கள் இணைப்பு)

சங்கிலிய மன்னன் சிலையை உடைத்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்போகிறார்கள் என முதலில் தகவல்கள் வந்தது. அதனை எல்லாத் தமிழ் இணையங்களும் செய்தியாகப் போட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக உறவுகளும் கொதித்துப்போனார்கள்............ read more  

Thursday 4 August 2011

பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களும் காஷ்மீர் பண்டிற்களும்

“இனச்சுத்திகரிப்பு என்பதும் இனப்படுகொலை என்பதும் ஒன்றல்ல. இது சிறிலங்காவின் வடக்கிற்கு நன்றாகப் பொருந்துகின்றது. ஆனால் காஷ்மீருக்கு பொருத்தமற்றது“ இவ்வாறு காஷ்மீர் பண்டிற்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையுடன் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒப்பிட்டு அலசியுள்ளார்- மும்பையைத் தளமாகக் கொண்ட 'daily news & analysis' ஊடகத்தின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹா. ............... read more 

திரியாய் தமிழ்க் கிராமத்தில் சிங்களவர்களை குடியேற்ற முயற்சி!

திருகோணமலை நகரிலிருந்து வடக்கே 42 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள திரியாய் என்ற தமிழ்க்கிராமத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு புனித நகராக்கும் திட்டம் என்ற பெயரில் 3000 ஏக்கர் காணியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மொத்தமாக 3069 ஏக்கர் 2 றூட் 15 பெர்ச்சஸ் காணி இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளது...................... read more 

குகநாதன் மீதான தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

சிரேஸ்ட செய்தி ஆசிரியர் குகநாதன் அவர்கள் கடந்த 29-07-2011 அன்று தனது பணியை முடித்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இனந்தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். தாக்குதல் நடைபெற்று ஒருவாரம் கடந்துள்ள போதிலும் கூட தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்ற............ read more 

தற்போதுள்ள அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார


தற்போதுள்ள அரசியல் அமைப்பு விதிகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயகார குறிப்பிட்டுள்ளார்............... read more

நெடுந்தீவிலிருந்து கடற்படையினரால் காலிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள 60 இளம் பெண்கள்! கடற்படை முகாமில் தையல் பயிற்சி! தடுக்க முற்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.


நெடுந்தீவிலிருந்து, 60 இளம்பெண்கள் கடற்படையின் விசேட தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், கடற்படையினரின் சீருடை தைக்கும் பணிகள் நெடுந்தீவிலேயே முன்னெடுக்கப்படும் என முன்னர் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன................ read more

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறதாம் சர்வதேசம் : ஐ.நா பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவிப்பு.


குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்................ read more 

ரணில் விக்கரமசிங்கவும் விரட்டப்பட வேண்டியவரே!

சிறீலங்கா அரசின் மீதான சர்வதேசத்தின் பார்வை இறுக்கமடைந்து வருகின்றது. சனல்-4 வெளியிட்ட ‘சிறீலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற ஆதாரம் உலகின் பல நாடுகளின் உயர் அரசியல் மட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது............ read more

கிழக்கில் உபத்திரபம் - வடக்கில் வஞ்சகம் - மேற்கில் செல்வம் - தெற்கில் அதிகாரம் ச.வி.கிருபாகரன்

மகிந்த ராஜபக்ச வேலணை மக்களின் உறவினன், கருணா சிங்கள மக்களின் உறவினன், டக்ளஸ் சமூக வேறுபாடுகளின் தலைவன். இவர்கள் தான் கிழக்கின் உதயத்தையும், வடக்கில் வசந்தத்தையும் கொடுக்கிறார்கள். அவ்வளவிற்கு ஈழத்தமிழர் இழிவானவர்களோ அல்லது மடையர்ககளோ அல்ல................ read more 

அமெரிக்காவில் ராஜபக்‌ஷவிற்கு எதிராக சமன்!


america-mahintha-04-08-11
அமெரிக்காவில் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த ராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது. ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது.............. read more 

யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் யுத்தம் மற்றும் இடப்பெயர்வு தொடர்பாக உளவியல் பாதிப்பு!


jaffna-yaal-04-08-11
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது............ read more

ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்: “ஈழத் தமிழர் படுகொலையை டி.வி.யில் பார்த்து அழுதேன்”; நடிகை அஞ்சலி


ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக் காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.................... read more

இலங்கை பத்திரிகை ஆசிரியர் மீது கொலை வெறித் தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்

தமிழர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் கடந்த வெள்ளிக் கிழமை அலுவலகத்தில் பணி முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தற்பொழுது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.................. read more 

ஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..!வீடியோ

இறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு
பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் .
இந்த இவரின் கண்ணீர் கதையினை பார்க்கும் போது பல விழிகள் அழுதிருக்கும்................ read more 

இலவசமாய் உங்கள் பிள்ளைகள் படிக்க இங்கே வாருங்கள் ..!video i


முற்றிலும் இலவசம் ..உங்கள் பிள்ளைகள் கல்வி பயிலும்  அதேவேளை
எம்மின உறவுகள் இதனால் பயன் அடைகின்றனர் .
 
இன்றே அனைத்திற்கும்  நாடுங்கள் ..பாவலர் நிலா
பிரித்தானியா வெம்பிளி பகுதியில் சிறார் முதல் உயர்தரம் வரை உங்கள் பிள்ளைகள்
கல்வி பயில இன்றே அழையுங்கள் .................... read more 

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை போர்க்குற்றவாளியாகப் பிரகடனப்படுத்துக..

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரின் போது சர்வதேசப் போர் நியமங்களுக்கு எதிராகக் குற்றச்செயல்களை மேற்கொண்டவர்களை போர்க்குற்றவாளி எனப் பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்தவேண்டும் என அ.தி.மு.கவின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ............. read more 

சுவிஸ் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களம்! காணொளி

இலங்கையின் படுகொலைக்களம் என்ற “சனல் – 4′ ஆவணத் திரைப்படம் நேற்று இரவு 8.55 மணிக்கு சுவிற்சர்லாந்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான FS -1 இல் ஒளிபரப்பப்பட்டது. இலங்கையின் கொலைக்களத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட காட்சிளை தொகுத்து போர்க்குற்றங்கள் சம்பந்தமான விபரண நிகழ்ச்சிசை ஒளிபரப்பிய............. read more

Wednesday 3 August 2011

மஹிந்தவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப ஆலோசனை! புரூஸ்



அமெரிக்காவில் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த இராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது.ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது................ read more

வாகனத்தை நிறுத்தாமல் பொலீஸின் வாகனத்தையும் இடித்து தள்ளிக்கொண்டு போனவருக்கு 23 மாத கால சிறை

பிரித்தானியா லண்டன் பகுதியில் வீதி காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்று அந்த வளியாக சந்தேகத்துக்கிடமாக வந்துகொண்டிருந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் கார் ஓட்டுனரோ பொலீஸின் சைகையை கூட பொறுட்படுத்தாமல் காவல்துறையினரின் காரையும் இடித்து தள்ளிவிட்டு தப்பிச்செல்லும் காணொளி வியக்க வைத்துள்ளது.................... read more 

தமிழீழ தனி நாட்டை மீட்டெடுப்பதற்கு ஈழத்தமிழர்கள் முனைப்பு காட்டிவரும் வேளையில் சாதிகள் பற்றி பேசி மக்களை பிளவு படுத்த தீபம் தொலைக்காட்சி முயற்சி!



உலக அரங்கில் இலங்கை அரசை போர் குற்றவாளியாக உறுதிபட பல நாடுகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ள நிலையில்,அதனை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தேச வாழ் தமிழ் மக்கள் இலங்கை அரசிற்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைந்து முற்பட்டு,தாம் வாழும்
அந்தந்த நாடுகளில் ஒற்றுமையுடன் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்தக் கால கட்டத்தில் தமிழ் மக்களை பிளவு படுத்தும் விதமாக சாதி என்ற இழிவான சொல்லை எடுத்து ................ read more 

தெருவிளக்கை பொருத்தும் ஆணை என்றால் எதற்காக சனாதிபதி உள்ளிட்ட பரிவாரங்கள் களமிறங்கிப் போராட வேண்டும்...? - ம.செந்தமிழ்.

உள்ளூராட்சித் தேர்தல் உண்மையில் தெருவிளக்குகளை பொருத்துவதற்கும் தண்ணீர் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது. அதற்கே கூட்டமைப்புக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளா............ read more

இந்தியா பற்றி சொல்லுவதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை.ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.


சென்றவாரம் தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் கோபிநாத்.
இந்தியா என்றால் உலக அரங்கில் அதன் பிம்பம் எப்படி ஒப்புவிக்கப்படுகின்றதென்பதை அழகாக வர்ணித்துக்கூறினார்.............. read more 

சென்னையில் சிங்களவர் மீது தாக்குதல்: ரீ சேட் எரிக்கப்பட்டது !

சுமார் 50 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் இன்று சென்னையில் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுடன் நடமாடியுள்ளனர். சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை இவர்கள் நடந்துசென்றது பல தமிழர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் சென்ட்ரல் பகுதியில் உள்ள ஏ.ஜி.பி விடுதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அங்கு தங்கியிருப்பதாக தமிழ் உணர்வாளர்களுக்கு செய்தி கிடைத்ததை அடுத்து, 
இருப்பினும் மாடிப் படியில் இருந்து மேலும் 3 சிங்களவர்கள் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுகளோடு வந்து தமிழ் உணர்வாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். தமிழனை அழித்துவிட்டு சிங்கக் கொடியோடு தமிழ் நாட்டில் என்ன துணிவில் நீங்கள் நடமாடுகிறீர்கள் எனக் கேட்டு தமிழ் உணர்வாளர் அவர்களை நையப்புடைந்துள்ளனர்............... read more

முத்திரைச் சந்தியில் மீண்டும் சங்கிலிய மன்னன் சிலை!


சிலை புனரமைப்புத் தொடர்பான செய்திகள் வெளிவந்த போது, ஆரம்பகிய சர்ச்சைகள் பல சிலை திறப்பு விழாவின் பின்னரும் தொடரும் நிலையிலும், சிலையின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், கடந்து, உயர்த்திய வாளோடு சங்கிலிய மன்னன் சிலை, புதுப்பொலிவோடு முத்திரைச் சந்தியில் காட்சி தருவது, யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவே அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் பல தடவைகள் சங்கிலிய மன்னனின் சிலை அரச படைகளால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..................... read more

பிரித்தானியாவில் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 2011.



முக்கிய செய்திகள்
 

மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா பிரித்தானியாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது.
வருடாந்தம் பிரித்தானியாவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா இவ்வருடம் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவாக தாயக நினைவுகளையும், தாயகத்தில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாவை ஒத்ததாகவும் நடைபெறவுள்ளது.
கோடைகால விடுமுறையின் இறுதி வாரமான  இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை (27-08-2011)அன்று வடமேற்கு லண்டன் பகுதியின் Windmill Ln, Southall, Middlesex UB2 4NE எனும் முகவரியில் அமைந்துள்ள "Warren Farm Sports Centre" மைதானத்தில் இடம்பெறவுள்ளது. .................. read more