Translate

Saturday 12 November 2011

காதலில் ஆறு வகை உங்கள் காதல் எந்த வகை ?


காதலில் ஆறு வகை உங்கள் காதல் எந்த வகை ?

காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக்கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.

njd;fpof;F yz;ld; jkpou; xd;wpa eyd;Gup xd;wpa cjtpf;fuj;jpd; epjpcjtp



njd;fpof;F yz;ld; jkpou; xd;wpa eyd;Gup xd;wpa cjtpf;fuj;jpd; epjpcjtp %yk; 12.11.2011 (rdpf;fpoik) kl;lf;fsg;G khtl;l ,e;J ,isQu; Nguitapdu; fpuhd; gpuNjr nrayhsu; gpuptpy; cs;s gwq;fpahkL ghujp tpj;jpahyaj;jpy; cs;s twpa khztu;fSf;F ghlrhiy cgfuzq;fs; toq;Fk; epfo;tpy; fye;J nfhz;l kl;lf;fsg;G khtl;l ,e;J ,isQu; Nguit jiytUk;> kl;lf;fsg;G khtl;l jkpo; Njrpa $l;likg;G ghuhSkd;w cWg;gpdUkhd rP.NahNf];tud; mtu;fis> ghlrhiy mjpgu;> Mrpupau;fs;> Cu;kf;fs;> khztu;fs; MfpNahu; khiy mzptpj;J tuNtw;gijAk;> ghuhSkd;w cWg;gpdu;> ghlrhiy mjpgu; mk;khztu;fSf;F ghlrhiy cgfuzq;fis itg;gijAk;> fye;J nfhz;l khztu;fisAk;> ,e;epfo;tpy; Muha;r;rp cj;jpNahfj;ju; fp.G];guhrh> ,e;J ,isQu; Nguit mYtyf nghWg;ghsu; f.re;jpufhe;j; mtu;fSk; fye;J nfhz;ldu;.




இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியா முக்கிய காரணம் – (நோர்வேயின் 208 பக்க அறிக்கை இணைப்பு)


புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும் என்று நோர்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த சிறிலங்காவின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் இயங்காது இருக்கும் உறவுகளுக்கு வாழவைப்போம் அமைப்பு கட்டில்கள் அன்பளிப்பு


போரினால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் இயங்காது இருக்கும் உறவுகளுக்கு வாழவைப்போம் அமைப்பு கட்டில்கள் அன்பளிப்பு
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது பெருமளவான மக்கள் படுகாயமடைந்து இடுப்பிற்கு கீழ் இயங்கமுடியாது படுத்த படுக்கையான நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து அவலப்படுகின்றனர். இவர்களில் மாற்றுவலுவுள்ளோர் சங்க தெரிவின்படி 10 பேருக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு சிறிதரன் பா.உ. ஆதரவில் கட்டில்கள் வழங்கியுள்ளது.

வன்னியில் நடத்தப்பட்ட பெரும்போர் காரணமாக ஏராளம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.அதிலும் உழைக்கும் வலுவுள்ள பலர் உடலில் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக மாற்றுவலுவுள்ளவர்களாக மாறியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் இடுப்புக்கு கீழ் இயங்காதவர்களாக படுத்த படுக்கையான நிலையில் பெரும் துன்பத்தை சுமந்துள்ளனர். அவர்கள் சீரான வீடுகளும் வசதிகளும் மருத்துவத்திற்கான பண வசதியும் இல்லாத நிலையில் வலிகளோடு வாழ்ந்து வருகின்றனர்........... read more 

நோர்வேயின் சமாதான முயற்சிகளின் தோல்விக்கான நான்கு அடிப்படைக் காரணங்கள்



சிறிலங்காவில் அமைதி முயற்சி தோல்வியடைந்ததற்கு நான்கு காரணங்களை முக்கியமானவை என்று இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த மக்கெல்சன் இன்ஸ்ரிரியூட்டைச் சேர்ந்த குன்னர் சோர்போ தெரிவித்துள்ளார்.
இந்தக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட அவர், அறிக்கையின் முக்கிய அம்சங்களை நேற்று ஒஸ்லோவில் விவரித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் இந்த அமைதி முயற்சிகளில் இறங்கிய போது கூட, தங்களது இலட்சியங்களை- நிலைப்பாடுகளை கைவிடாமலேயே இருந்து வந்தனர்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்கிறார் மஹிந்த


யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்கிறார் மஹிந்த
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை பாதுகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிக்கான நடைப்பயணம் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் நிறைவடைந்தது!


நீதிக்கான நடைப்பயணம் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் நிறைவடைந்தது!
தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் லண்டனில் நிறைவடைந்துள்ளது. பிரித்தானிய பிரதமர் அலுவலக வாசல்தலத்தின் முன் நிறைவுகண்ட இந்த நடைப்பயணம் மன்செஸ்டர் நகரில் இருந்து 29-10-2001 அன்று தொடங்கியிருந்தது.

சிங்கள அரசாங்கத்தை காப்பாற்ற முற்படும் நபர்களில் யேர்மன் ஹாம் (Hamm ) ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் பாஸ்கரனும் கூட்டணி?


சிங்கள அரசாங்கத்தை காப்பாற்ற முற்படும் நபர்களில் யேர்மன் ஹாம் (Hamm ) ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் பாஸ்கரனும் கூட்டணி?


உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தாம் வசிக்கும் நாடுகளில் சிங்கள அரசு மேற்கொண்ட இனவழிப்பை சுட்டிக்காட்டி தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் நேரத்தில் அதை முறியடிக்க சிங்கள அரசு சில கைக்கூலிகளை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தி வருகின்றது.

அந்த வரிசையில் கடந்த தீபாவளி தினமன்று பிரான்க்போர்ட் (Frankfurt ) நகரில் உள்ள சிறீலங்கா காவற் தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் பாஸ்கரன் இணைந்துகொண்டு சிறீலங்கா அரசின் சாதகமான பரப்புரைக்கு துணை நின்றார்............. read more 

சிங்கள கொலைவெறி கூட்டத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய சில தமிழ் தேச விரோதிகள்.

கடந்த ஞாயிறு அன்று (6 – 11 – 2011) ஒட்டாவாவிலுள்ள சிறீ லங்கா ஹை கமிஷன் தனது தூதரகத்தில் இரண்டாவது முறையாக தமிழர்களுக்காக என்று கூறி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளது.
டொரன்டோவில் இநிகழ்ச்சியானது கொரியன் கலாசார மையத்தில் வைத்து நடைபெற்றதாம்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் மாபெரும் எதிர்ப்புக்கிடையே வெற்றிகரமாக அவர்கள் இதனை நடத்தி முடித்தார்களாம். இதற்கிடையே புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வானொலியில் இது குறித்து தமிழர்களை போராட்டத்திற்கு வருமாறு அழைத்ததில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் வாயிலேயே பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றதாம்.

சிறீலங்கா அரசின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கெதிராக அணி திரண்ட தமிழ் மக்கள்


சிறீலங்கா அரசின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கெதிராக அணி திரண்ட தமிழ் மக்கள்

கனடாவின் நோத் யோர்க் நகரில் சிறீலங்கா அரசின் ஏற்பாட்டில் இடம் பெற்ற
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தினைப் பகிஷ்கரிக்கு முகமாக நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

காதலியுடன் தான் கொண்ட பாலியல் உறவைக் காணொளியாக வெளியிட்ட காதலன்!! -யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்


காதலியுடன் தான் கொண்ட பாலியல் உறவைக் காணொளியாக வெளியிட்ட காதலன்!!  - யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

தான் காதலித்ததாகக் கூறும் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு அதனைக் கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்து ஏனையோருக்கு விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டப்படும் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னராசா தனேஸ்வரன் (வயது-39) என்ற கொட்டடியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டிகள் - வாய்ப்பை இழந்தது இலங்கை


2018 ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டிகள் - வாய்ப்பை இழந்தது இலங்கை

வாக்கெடுப்பில்  அவுஸ்திரேலியாவுக்கு 43 வாக்குகளும் இலங்கைக்கு 27 வாக்குகளும் கிடைத்தன.

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்திருக்கிறது. அந்த வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது.

புலிகளை இந்திய உளவுத்துறையே அழித்தொழித்தது - நோர்வே


இலங்கைச் சமாதான முயற்சிகள் இடம்பெற்ற காலத்தில் இம்முயற்சிகளை ஆதரிப்பதாக இந்தியா வெளிப்படையாக கூறினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளை உரிய இடத்தில் அடக்கி வைக்க வேண்டும் என நோர்வேயிடம் இந்தியா அந்தரங்கமாக கூறியது என நோர்வேயில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலவை செய்திடுவோம் மூளைகளை ... தடுத்திடுவோம் தற்கொலைகளை .....!


பொய்யான முகவரியில்
விடுதியின் விட்டதில்
தொங்கும் அடையாளமில்லா
மரணங்கள் ...

பதினாறு வயது
பருவ பட்டாம் பூச்சியின்
பள்ளிமரணம் ....

பதினெட்டு வயது
கல்லூரிக் காளையின்
தண்டவாள மரணம்...

Friday 11 November 2011

யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வரணி கரம்பன் இடைக்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றும் 43 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் என்பவரே மேற்படி படுகொலை செய்யப்பட்டவராவார்.

திருமணமாகி சிறிது காலத்திற்குள் மனைவியைப் பிரியும் இளவரசர் வில்லியம் _


  பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேற்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் பிரியவுள்ளனர்.

அந்நாட்டு அரச விமானப் படையில் விமானியாகப் பணியாற்றும் வில்லியம் தனது தொழில் நிமித்தம் அடுத்த ஆண்டு பெப்ரவரியிலிருந்து குறைந்தது 6 வாரங்களை 8000 மைல்கள் தொலைவில் உள்ள போல்க்லேண்ட் பிராந்தியத்தில் கழிக்கவுள்ளார். 

அமைதி வழிமுறை தோற்றதை நோர்வே ஆராய்ந்துள்ளது



இலங்கையில் நோர்வேயின் மத்தியஸ்தராக செயல்பட்டவர் எரிக் சொல்ஹைம்
இலங்கையில் நோர்வேயின் மத்தியஸ்தராக செயல்பட்டவர் எரிக் சொல்ஹைம்
இலங்கையில் தோல்வியடைந்த அமைதி வழிமுறை குறித்து நோர்வே ஒரு சுயமதிப்பீட்டைச் செய்துள்ளது.
இலங்கையில் 1997ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை அமைதித் தூதுவராக நோர்வே செயல்பட்டிருந்தது.
நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதீப்பீட்டுப் பணியை, நோர்வேயில் இருந்து இயங்கும் மைகேல்சன் இன்ஸ்டிடியூட் மற்றும் லண்டனில் இருந்து செயல்படும் கீழ்த்திசை மற்றும் ஆப்ரிக்கக் கல்விகள் கழகம் ( சோ-அஸ்) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.

போருக்குப் பின்னரான இலங்கையின் நிலை குறித்து லண்டனில் கூட்டமைப்புப் பேச்சாளர் சுரேஷ் விளக்கம்


யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாகவும், அமெரிக்கா, கனடா மற்றும் லண்டனில் கூட்டமைப்பு மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் லண்டன் வாழ் தமிழ் உறவுகளுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் உறவுகள் கலந்துகொண்டதுடன் தங்களது சந்தேகங்களைக் கேட்டதுடன், ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கினார்.............. read more 

ஜெயலலிதா தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது: சீமான்


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

ஸ்ரீலங்காவில் மனித உறுப்புகளை கள்ளமாக எடுக்கும் கோஷ்டி!


இலங்கையில் போர்குற்றம் நடந்தது, இன அழிப்பு நடந்தது, தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்யப்பட்டர்கள் ஆனால் இவற்றை விட உயிருடன் உள்ளபோதே உடல் உறுப்புக்களை களவாடி எடுத்து அதனை விற்கும் கும்பலும் இங்கும் உள்ளது. இவர்கள் பிடியில் இருந்து அதிஷ்டவசமாகத் தப்பி வந்த பெண் இலங்கைப் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ய முன்னர் ஆசிய மனித உரிமைச் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார் என்றால் பாருங்களேன்.

போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!


அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே!
நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது.

சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.

மோசடியில் ஈடுபட்ட இரண்டு பிரித்தானிய வீசா விண்ணப்பதாரிகள் கைது


மோசடியில் ஈடுபட்ட இரண்டு பிரித்தானிய வீசா விண்ணப்பதாரிகள் கைது
மோசடியில் ஈடுபட்ட இரண்டு பிரித்தானிய வீசா விண்ணப்பதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பிரித்தானியா வீசா பெற்றுக் கொள்ளும் நோக்கில் போலியான ஆவணங்களை வழங்கிய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே
இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே : தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தீர்வை இறக்குமதி செய்ய முடியாது-ஜனாதிபதி.


எமது நாடுகள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் விவகாரங்களுக்கு இறக்குமதி  செய்யப்படும் தீர்வு நிலைத்து நிற்காது எனவும் உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வே நீடித்து  நிற்கும் எனவும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   தெரிவித்துள்ளார்.

யாழ் மாணவர் மத்தியில் ஹெரோயின் பாவனை – யாழ் மக்கள் அதிர்ச்சி


ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபை பதவிக்காக இந்தியாவுடன் சீனா மோதல்


  ஐ.நா சபையில் காலியாக உள்ள உயர் பதவியை கைப்பற்றும் போட்டியில் இந்தியாவும் சீனாவும் நேரடியாக மோத உள்ளன.
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கோபிநாதனும் சீனாவின் சார்பில் தற்போ‌தைய சீன தூதர் ஜாங்யானும் களத்தில் மோத தயாராக உள்ளனர். ஐ.நாவில் காலியாக உள்ள இந்த பதவிக்கு கடந்த 1977 க்கு பின்னர் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்தப் பெண்மணி?


யார் இந்தப் பெண்மணி?   சலசலப்பு





யார் இந்தப் பெண்மணி?
இவரது பெயர் “கிம் புஃக்” இவர் தற்போது கனடாவில் வசிக்கிறார். இவர் ஒரு பிரபலமானவர். இவர் எதனால் பிரபலமானவர்?

வரலாற்றில் மாவீரர்களைக் கௌரவிக்கும் பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு....,:- அ.மயூரன்.

வரலாற்றில் மாவீரர்களைக் கௌரவிக்கும் பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு....,:- அ.மயூரன்.
  • உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. 
  • உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது. 
இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.   அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

புலம்பெயர் தமிழர்கள்மீது முப்படைகளையும் ஏவிவிட்டுள்ள சிங்கள அரசு!


புலம்பெயர் தமிழர்கள்மீது முப்படைகளையும் ஏவிவிட்டுள்ள சிங்கள அரசு!

    அண்மையில், கனடாவிலிருந்து தமிழீழம் சென்று திரும்பிய ஒரு யுவதி என்னிடம் கேட்டார், அண்ணை இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? என்று. 

    திடீரென் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த நம்பிக்கையில்தான் தமிழ்த் தேசியம் இப்போதும் பலமாக நிற்கிறது. அந்தப் பலத்தை இழப்பதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள். நான் அண்ணை இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புகின்றேன் என்றேன். 

    தமிழீழத்தின் அத்தனை திசைகளிலும் வாழும் மக்களும் அந்த நம்பிக்கையில்தான் தங்களை உயிர்ப்பித்துக்கொள்கின்றார்கள். அந்த நம்பிக்கையுடன்தான் அடுத்த பொழுதை அவர்கள் எதிர்கொள்கின்றார்கள் என்று அவர் கூறினார்.

Thursday 10 November 2011

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள்..

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. உறவுகள் அனைவரும் கடலூரில் கடலென கூடுவோம்.. மாவீர்கள் நினைவைப்போற்றுவோம்…



இந்து மாமன்றத்தின் கட்டுரை போட்டியில் பரிசில் பெறுவோர்


பாகிஸ்தான் பள்ளிகள்,மதரஸாக்களில் இந்துக்களுக்கு எதிரான பாடவிதானம் _


  பாகிஸ்தானில் உள்ள அரச பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் இந்து மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பில் பிழையானதும், வன்முறையைத் தூண்டும் வகையிலானதுமான கருத்துக்கள் போதிக்கப்படுவதாக அமெரிக்க ஆய்வறிக்கையொன்று சுற்றிக்காட்டியுள்ளது.

நோர்வே சமாதான முயற்சிகளின் மதிப்பீடு வெள்ளியன்று முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் வெளியாகிறது!

இலங்கையின் நோர்வேயால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யுப்பட்டுள்ள கருத்தரங்கு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. இக்கருத்தரங்கில் இலங்கைக்கான சமாதான முயற்சியின் முன்னாள் சிறப்புத்தூதரும் நோர்வேயின் சூழல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹைம் கலந்து கொண்டு மதிப்பீட்டறிக்கை தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

ஹசாரே மீது சோனியா கடும் தாக்கு


சமோலி (உத்தரகண்ட்), நவ.9: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அவர்களையும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் முதலில் பார்க்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்............ read more 

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு

"வரமாட்டேன்': இலங்கைக்கு வருமாறு, மன்மோகன் சிங்கை ராஜபக்ஷே அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்னைகளில், நல்ல தீர்வு ஏற்படும் வரை, இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.............. read more 

தமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..


தமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை முற்றிலும் நீக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோ கணேசனுக்கு நாடாளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள எம்.சுவாமிநாதன் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....... read more 

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்களை புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்களை புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு



ஆணைக்குழு முன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆணைக்குழு சாட்சியமளித்த பெண்களை மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது.......... read more

சிங்கள மயமாக மாறிய யாழ். நாகவிகாரை! வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர் தமிழர்கள்!!

சிங்கள மயமாக மாறிய யாழ். நாகவிகாரை! வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர் தமிழர்கள்!! 

யாழ். நாகவிகாரையில் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுடன் பெரெஹரா கொண்டாட்டங்கள் இன்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான பேரேஹரா நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரையில் யாழ்.நகரை சுற்றி வலம் வந்தது............ read more 

சார்க் மாநாட்டில் இந்தியாவிடம் 110 மில்லியன் டொலர்களைப் பிச்சை எடுத்த மகிந்த


17 ஆவது சார்க் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது............... read more 


சார்க் மாநாட்டில் இந்தியாவிடம் 110 மில்லியன் டொலர்களைப் பிச்சை எடுத்த மகிந்த

மலையகத்தில் பொலீஸ் பதிவுகள் : மக்கள் அச்சத்தில்

இன்றைய தினம் மஸ்கெலியா நகரிற்கு வந்த மஸ்கெலிய பொலிஸார் குடியிருப்பாளர் விபர அட்டவணை என்ற ஒரு விண்ணப்பத்தை வழங்கியதாகவும் அதனை நிரப்பி வைக்குமாறும் நாளை வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.


மகிந்த ராஜபக்சவின் பாசிச அரசு சிறுபான்மை தேசிய இனங்கள் வாழும் பகுதிகளை இராணுவ ஆட்சிக்கு உட்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் இதுவும் ஒன்றா எனச் சந்தேகம் தெரிவிக்கபடுகின்றது.

'சூர்யா பட வசனத்தை நீக்கிய இலங்கையில் இனி தமிழ்ப் படங்களை வெளியிடக் கூடாது!'


ஈழத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்திய தாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது.
இலங்கையில் இனி தமிழ்ப் படங்களை வெளியிடக் கூடாது!
சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வசனங்களை நீக்கிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இனி அங்கு தமிழ் திரைப்படங்களே திரையிடக்கூடாது என போராட்டம் வெடித்துள்ளது........ read more