Translate

Saturday 14 July 2012

விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா: ஜனாதிபதி மஹிந்தவின் தப்புக் கணக்கு!


விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா: ஜனாதிபதி மஹிந்தவின் தப்புக் கணக்கு!

Posted Imageஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.

பிரிட்டனில் ஒருநாள் மட்டும் மழை பெய்யாது


flood_drop_001புயலும், தொடர் மழையும் பெய்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கள்கிழமை மட்டும் பிரிட்டனில் உலர்ந்த நிலையே காணப்படும் என்று வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ

Posted Imageதமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன. 

“திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் முடிவிலி


ஆட்சியில் சமபாகத்தை  தர முடியாவிடின் 5 கிராமங்களையாவது வழங்குங்கள் அதுவும் இயலாது என்றால் 5 வீடுகளையாவது தாருங்கள் என்று பாண்டவர்கள், கிருஷ்ண பரமாத்மாவை தூது அனுப்பி துரியோதனாதியர்களான கௌரவர்களுடன் கேட்ட போது , ஊசி நிலமும் தர மாட்டோம் என்று  கௌரவர்கள் உறுதியாகக் கூறி கிருஷ்ணனை திருப்பி அனுப்பி விட்டதாக இந்துக்களின் இதிகாசமான மகா பாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



 இப்போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்களைத் தாமே நிர்வகிக்கக் கூடிய மாகாண சுயாட்சி உரிமையையாவது வழங்குங்கள் என்று அந்த மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்து வரும் கோரிக்கையும்   5 ஊர்களையாவது தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் உரிமையை வழங்க வேண்டுமென்ற தொனியிலேயே இருக்கின்றது.

இலங்கை அரசு ஒரு மனநோயாளி போலச் செயல்படுகின்றதா? Read more about இலங்கை அரசு ஒரு மனநோயாளி போலச் செயல்படுகின்றதா? [5256] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


கொழும்பு: கடந்த வியாழக்கிழமை (12/07/2012) கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அரசின் அடக்குமுறைப் போக்கை மிக வன்மையாகக் கண்டித்து, "இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட முயற்சிக்கும் இந்த அரசு மனநோயாளிபோல் செயற்படுகின்றது" என இலங்கை அரசாங்கத்தை மிகக் கடுமையாகச் சாடினார்.

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் புதிய அமைப்பு.

Posted Imageமஹிந்த ராஜபக்ச ஆட்சி குறித்து விரக்தி அடைந்துள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் இலங்கை பயணம்

புது தில்லி, ஜூலை 11: மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை மாலையில் இலங்கைக்குப் பயணமானார்.
மூன்று நாள் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளார் அவர். இந்தியாவில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் குறித்து கொழும்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேசுகிறார். அங்கு, லக்ஷ்மண் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் உத்திகளுக்கான கல்வி நிறுவனம் நடத்தும் கருத்தரங்கில் அந்த திட்ட அமலாக்கம் தொடர்பான தனது அனுபவங்களை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து கொள்கிறார்.

சபரகமுவ தேர்தலில் மனோவுடன் கூட்டுச்சேர்கிறார் தொண்டமான்


சபரகமுவ தேர்தலில் மனோவுடன் கூட்டுச்சேர்கிறார் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்துள்ள சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

Friday 13 July 2012

இந்தியாவைத் துரத்தும் ஆபத்துக்களும் கோழைத்தனமான ராஜதந்திரமும்!- Rste


இந்தியாவைத் துரத்தும் ஆபத்துக்களும் கோழைத்தனமான ராஜதந்திரமும்!- Rste

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவால் அதிர்ச்சி அடைந்துள்ளது மத்திய அரசு, தூதர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சுமந்திரன், சம்பந்தன் ,சரவணபவன் உட்பட்டவர்களின் பின்னணியில் தேசிய இணையங்கள் முடக்கம்?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நெருக்கடிகள் மத்தியிலும் குரல் கொடுத்துவருகின்ற தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் இலங்கையில் தமி்ழ் மக்களால் பார்வையிடுவதற்கு முடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்காமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கிறது.

உண்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றமையால், தமிழ் மக்களின் உரிமைகளைப் போன்றே தமிழ்த் தேசிய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் இலங்கையில் முடக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டு நான்கு நாட்களைக் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் எந்தக் கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்கின்ற கூட்டமைப்பினர் புலத்திற்கும் நிலத்திற்குமான இணைப்புப் பாலங்களாக செயற்பட்டுவருகின்ற இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.

இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - நா.வைகறை பேச்சு


இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - நா.வைகறை பேச்சு
“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது

மத வழிபாட்டு உரிமை மறுப்பும் இனஅழிப்பின் ஒர் அங்கமே : தமிழகத்தில் சர்தவ மத தலைவர்கள் முழக்கம் !


மத வழிபாட்டு உரிமை மறுப்பும் இனஅழிப்பின் ஒர் அங்கமே : தமிழகத்தில் சர்தவ மத தலைவர்கள் முழக்கம் !

srilanka-1ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது இனவழிப்பின் ஓர் அங்கமாக இலங்கைத்தீவின் தமிழ் பேசும் மக்களது மத வழிபாட்டு உரிமைக்கான மாபெரும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலொன்று தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து மதத் தமிழ் மக்கள் மன்றம் – சென்னை இந்த ஆர்ப்பாட்டஒன்றுகூடலை முன்னெடுத்திருந்தது.

5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம்.


5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம்.

olympics20125 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கருணாவின் சகோதரி ! கருணா பிள்ளையானிடையே போட்டி!


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கருணாவின் சகோதரி ! கருணா பிள்ளையானிடையே போட்டி!

எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம். அவ்வியக்கத்தின் பிரதான வேட்பாளராக கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன் போட்டியிடுகின்றார். அவர்தான் முதலமைச்சர் வேட்பாளரும்கூட என அக்கட்சி தெரிவிக்கின்றது. 

வீட்டு வேலைக்காரப் பெண் கற்பழித்து கொலை: இந்திய முன்னாள் அமைச்சர் கைது.


இந்தியாவில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் என்பவர் தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது யுவதியை கற்பழித்து கொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது சாரதிகள் மூவரும் கைது செய்யப்பட்டள்ளனர். 

கிழக்கில் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட முடிவு


இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாகஅதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார்.

கோத்தபாயவை பணி நீக்கம் செய்யவேண்டும் – மங்கள சமரவீர.



கோத்தபாயவை  பணி நீக்கம் செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.நாகரீகமான சமூகக் கட்டமைப்பிற்கு ஒவ்வாத காரியங்களை பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோதபாய ராஜபக்ஷ போன்ற வினைத்திறனற்ற அரச ஊழியர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது பயனற்றது என ஒரு மாத காலத்திற்கு முன்னர் தாம்எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஓழுக்கம் தெரியாத கோட்டாபாய யார்- விக்கிரமபாகு (வீடியோ)



கோட்டாபாய ஒழுக்கமான முறையில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், எமக்குத் தெரியும். நாய் ஒன்றை உசுப்பேத்தினால் ஊ.. பௌ.. என்று கத்தும் அதனைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது… தவளையை அடித்தால் ஊ பக.. பக.. என்று சத்தமிடுவதை தவிர வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது. ஓழுக்கமான முறை என்று இவர் நினைத்தால் நாம் குற்றவாளிகள்.. அவர் இருக்கும் நிலையில் பதிலளித்துள்ளார். அதுதான் உண்மையான கதை.

பலாங்கொடையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள காடையர்கள்


பலாங்கொடை அலுப்பல தோட்டத்தின் வெல்லவல பிரிவில் சிங்களகாடையரின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக சபையைச் சேர்ந்த காரியசித்தன் வேல்முருகன் (28), நாகலிங்கம் கதிரேசன் (23) ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கசிப்பு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாகவே தாக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ

Posted Imageதமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ
தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன. 

அவர்கள் ஒரு நாய்க்குட்டி கொண்டு இருக்கிறது - அது என் மனைவிக்கு


Outif தெளிவுபடுத்த மற்றும் கண்டுபிடிக்க சண்டே லீடர் தொடர்பு போது பாதுகாப்பு செயலாளர், Gotabaya ராஜபக்ஷ அவர் இலங்கை ஏர்லைன்ஸ் நிர்வாக ஒரு சிறிய வெள்ளி ஜூலை 13 ஜூரிச் பறக்க திட்டமிடப்பட்ட ஒரு பரந்த உடல் ஏ 340, மாற்ற ஒரு முடிவை எடுத்தது என்று தெரியும் மனநிலை சரியாக இல்லாததால் வன்முறை போல் செயல்படுகிற சென்றார் ஏ 330. மாற்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு மகள் டேட்டிங் யார் ஒரு இலங்கை விமானத்துறை பைலட், தனிப்பட்ட முறையில் ஜூரிச் இருந்து பாதுகாப்பு செயலாளர் Gotabaya ராஜபக்ஷ ஒரு 'நாய்க்குட்டியின்' செயல்படுத்த என்று விமானத்தை பறக்க முடியும் என்று செய்யப்பட இருந்தது.

புலி போல் பாய வேண்டிய இந்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிகிறது: ஜெயலலிதா


புலி போல் பாய வேண்டிய இந்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிகிறது: ஜெயலலிதா

புலி போல் பாய வேண்டிய இந்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை  அரசிடம் பணிந்து செல்வதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா,இலங்கை வீரர்களுக்கு வேறு மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படும்  விவகாரத்தில் கருணாநிதி நழுவலாக பேசியிருப்பதாகவும் சாடியுள்ளார்.

அமெரிக்கா வெளிப்படுத்திய முள்ளிவாய்க்கால் புதைகுழி செய்மதிப் படங்களை நிராகரிக்கிறார் கோத்தாபய.


அமெரிக்கா வெளிப்படுத்திய முள்ளிவாய்க்கால் புதைகுழி செய்மதிப் படங்களை நிராகரிக்கிறார் கோத்தாபய.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் பற்றிய, அமெரிக்க செய்மதியினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது.

சபரகமுவ பிசி தேர்தலில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வேட்பாளர்களை ஒரு பொதுவான பட்டியல் செய்ய முடிவு.


Arumugan தொண்டமான், மனோ கணேசன், ராதா கிருஷ்ணன் சபரகமுவ PC க்கான கைகளை
இ.தொ.கா. தலைவர் அமைச்சர் Arumugan தொண்டமான் மற்றும் DPF தலைவர் மனோ கணேசன் கொழும்பில் இன்று அவசரமாக சந்தித்து சபரகமுவ பிசி தேர்தலில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வேட்பாளர்களை ஒரு பொதுவான பட்டியல் செய்ய முடிவு.

I.eh. kdpj chpik rigapd>; 22tJ $l;lj; njhlh; 2013k; Mz;L ngg;uthp-khh;r; khjk; eilngWk; nghOJ> mjdJ KjyhtJ thuk>; n[dpthtpy; cs;s I.eh. Kw;wypy; Ch;tyk; khngUk; $l;lk; elj;JtJ jhd; jkpoPo kf;fSf;F gpuNahrdkhdJld; I. eh.tpy; jhf;fj;ijAk; Cf;fj;ij cz;Lgz;Zk;.


vjph;tUk; nrg;lk;gh; khjk; eilngwTs;s 21tJ $l;lj; njhlhpd; nghOJ I.eh. Kw;wypy; Ch;tyk; $l;lk; elj;JtJ jkpoPo kf;fSf;F ve;jtpj gpuNahrdj;ijAk; nfhz;LtuhJ vd;gij cq;fSf;F njhpag;gLj;j tpUk;GfpNwd;.

Thursday 12 July 2012

யார் இந்த தமிழினி ? சிறப்பு தகவல்கள் !


 
சிவசுப்பிரமணியம் சிவகாமி அல்லது தமிழினி வெலிக்கடையிலுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஜூன் 26 ஆம் திகதி மாற்றப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் அரசியல் பிரிவு பொறுப்பாளரான இவர், ஜுன் 22 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிபதி ரஷ்மி சிங்கப்புலியின் கட்டளைப்படியே மாற்றப்பட்டார். பூந்தோட்டம் பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் குறிப்பிட்டகாலம் புனர்வாழ்வுக்கு உள்ளாகிய பின் தமிழினி ஒரு கட்டத்தில் விடுதலை பெறவுள்ளதையே இந்த இடமாற்றம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வில்


பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை பெற உள்ள கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வில் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.


தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள இனவெறி அரசாங்கங்களின் இன அழிப்பின் இரத்தக்கறை படிந்த மற்றொரு அத்தியாயம் ' ஜூலை 23'. சிங்கள காடையர்களால் 3000 இற்கும் அதிகமான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், பல கோடிகள் பெறுமதியான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். குட்டிமணி தங்கத்துரை உட்பட ஏராளமான தமிழ் சிறைக் கைதிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்த அவலம் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து இன்றும் அரங்கேற்றப் பட்டுவருகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் வவுனியா சிறைச்சாலையில் தமிழ் கைதியான நிமலரூபன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பலாங்கொடையில் தமிழர்கள் மீது தாக்குதல்


பலாங்கொடையில் தமிழர்கள் மீது தாக்குதல்

பலாங்கொடை அலுப்பல தோட்டத்தின் வெல்லவல பிரிவில் பெரும்பான்மையினரின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக சபையைச் சேர்ந்த காரியசித்தன் வேல்முருகன் (28), நாகலிங்கம் கதிரேசன் (23) ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கசிப்பு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாகவே தாக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழினத்தைப் பாதுகாக்கக்கூடிய ஒரே வழி தமிழீழ அரசேயாகும்: அமெரிக்காவில் வி. உருத்திரகுமார் அறிவிப்பு


தமிழினத்தைப் பாதுகாக்கக்கூடிய ஒரே வழி தமிழீழ அரசேயாகும்: அமெரிக்காவில் வி. உருத்திரகுமார் அறிவிப்பு
இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உள்ளான நமது இலங்கைத் தமிழினம், தன்னை தொடர்ந்து பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான் என்று நிச்சயமாக நம்பியபடியால் நாம் அந்த அரசை நிறுவியுள்ளோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இளநரையை போக்குவதற்கான சில டிப்ஸ்


இளநரையை போக்குவதற்கான சில டிப்ஸ்

உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறி வரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கி விடுகிறது.
சமச்சீரற்ற உணவு முறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.
இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள்.

வடக்கில் 5மக்களுக்கு ஒரு படையினர்


வடக்கில் 5மக்களுக்கு ஒரு படையினர்

வடக்கில் 5 பொதுமக்களுக்கு ஒரு படை சிப்பாய் என்ற அடிப்படையில் அங்கு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக   இந்திய சஞ்சிகை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் வார இதழுக்கு(Economic and Political Weekly) விசேட ஆக்கம் ஒன்றை எழுதியுள்ள செய்தியாளர் பாதுகாப்புச் செயலாளர் அரசாங்கம் மற்றும் படைத்துறை இணையத்தளங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்துள்ளதுடன் வடக்கில் குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆண்மையற்றவர் மன்மோகன் சிங்.. பால் தாக்கரே


அரசியல் ரீதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஆண்மையற்றவராக இருக்கிறார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் முடிவு கட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார் தாக்கரே.

நிமலருபன் மரணத்திற்கு நியாயம் வேண்டும்

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 'அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான அமைப்பு' அழைப்பு விடுத்திருந்தது.

காணாமல்போயிருந்த இளைஞர் கோமா நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

வவுனியா சிறைக்கைதிகள் பலர் தென்னிலங்கை சிறைகளுக்கு மாற்றப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது
இலங்கையின் வடமேற்கே, மன்னார் மாவட்டத்தில் அரச சிறப்பு முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்து, பின்னர் தொடர்புகளின்றி காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்புக்கு அருகே உள்ள ராகம வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.

கிழக்கில் 15 ஆம் திகதிக்குப் பின்னரே தமிழ்க் கூட்டமைப்பு வேட்பு மனு


tnaரொஷான் நாகலிங்கம்
கிழக்கு மாகாண சபைக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்பே தாக்கல் செய்யவுள்ளதாகக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி வேட்பாளர்களை இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கால்வாசித் தமிழர்களை கொன்று விட்ட வடக்கில் தேர்தல் நடத்தப் போகிறாராம் ராஜபக்சே!


கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு கவுன்சில் தேர்தலை நடத்தப் போவதாக ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைக் கூப்பிட்டு இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை இலங்கைப் படையினர் சுடுகாடாக மாற்றி விட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து விட்டனர். பல பகுதிகளில் இன்னும் மக்கள் குடியேறாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கவுன்சில் தேர்தலை நடத்ததப் போகிறாராம் ராஜபக்சே.

ஈழப் புரட்சிக்க அஜித் உதவியா?


ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் வேடத்தில் நடிகர் அஜித் குமார் பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2 ஆம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக எப்படி ஒரு சாதரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் மஹிந்தவிடம் அடகு வைக்கும் தரகர்கள் முஸ்லிம் தலைவர்களுக்கு சமீர் ஹாசிம் கண்டனம்


ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் மஹிந்தவிடம் அடகு வைக்கும் தரகர்கள் முஸ்லிம் தலைவர்களுக்கு சமீர் ஹாசிம் கண்டனம்
 இனவாத அரசுக்கு மூக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அத்தாவுல்லா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருடன் சில மதத் தலைவர்களும் இணைந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் மஹிந்த ராஜபக்ஷவிடம் அடகு வைத்து விட்டனர். இவர்களைத் தரகர்கள் என்றே கூறவேண்டும்.

செனட் சபையே 13+ 2013 செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதி "இந்து'வுக்கு தெரிவிப்பு

செனட் சபையே 13+ 2013 செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதி "இந்து'வுக்கு தெரிவிப்பு 


வட மாகாண சபைக்கான தேர்தலை 2013 செப்டெம்பரில் நடத்துவதற்கு விரும்புவதாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை படிமுறையாக மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, அரசியல் தீர்வாக 13 + ஸை வழங்கப்போவதாக அவர் முன்னர் குறிப்பிட்டிருந்த உத்தேச செனட் சபையே அந்த 13 + என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். 

நிமலரூபன் கொலைவிடயத்தில் அரசு ஐநாவிடம் தப்பமுடியாது சிக்கலில் மாட்டிவிட்டது மஹிந்த அரசு என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்


நிமலரூபன் கொலைவிடயத்தில் அரசு ஐநாவிடம் தப்பமுடியாது சிக்கலில் மாட்டிவிட்டது மஹிந்த அரசு என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்
news
 ஐ.நா மனித உரிமைகள் சபையின் மீளாய்வுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வவுனியா தமிழ்க்கைதி நிமலரூபனின் கொலை குறித்து அரசு பொறுப்பான பதிலை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து அரசு ஒருபோதும் தப்பமுடியாது. அந்த அளவுக்கு சிக்கலில் மாட்டியிருக்கிறது மஹிந்த அரசு. 

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:-


வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:-
 வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளதாக அந்த மாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுத்த காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்

யுத்த காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்
கோத்தாபய ராஜபக்ஷ - இணைப்பு 3
யுத்த காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்
படைவீரர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் படையினருக்கு தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாமே.

உலகவாழ் தமிழர்களே தமிழச்சிகளே,

கீழ்க்கண்ட இணைப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 

நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாமே.

http://www.facebook.com/photo.php?fbid=171561099635520&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=171576556300641&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன் முற்றுகை! இயக்குநர் சீமான் உள்ளிட்ட 500 பேர் கைது


செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன் முற்றுகை! இயக்குநர் சீமான் உள்ளிட்ட 500 பேர் கைது

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதிகள் தங்களை திறந்த வெளி முகாம்களுக்கு மாற்றக்கோரி நீண்ட நாட்களாகவே போராடி வருகிறார்கள்.

நைஜீரியாவில் இருந்து இலங்கை சென்று முளகாய் அரைத்த நபர் சிக்கினார் !

லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்திருப்பதாக கூறி இலங்கையர்களை திட்டமிட்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நைஜீரிய பிரஜையொருவரை ஜூலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. வெள்ளவத்தையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், கிளின்ச் கிறிஸ்டியன் எனும் இச்சந்தேக நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளது


சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளதாகவும் இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

FeTNA: இ.ஆ.ப சகாயம் பேசியது என்ன?



தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

FeTNA: தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தி வரும், ஒவ்வொரு ஆண்டுக்கான தமிழ்த் திருவிழாவிலும் தமிழ் மாணவர்களுக்கான ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் இடம் பெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளி விழாவிலும் ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் வெகுசிறப்பாக நடந்தேறின. அப்போட்டிகளில், ‘பேச்சுப் போட்டி’, ‘கட்டுரைப் போட்டி’, ‘திருக்குறள் ஓதுகை’, ‘பன்முகத்திறன்’ முதலானவை இடம் பெற்றன. அவற்றுள், கவனகர் கலை.செழியன் நடத்திய ‘தமிழ்ப் பன்முகத்திறன் (Thamizh Jeopardy)' அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை


தமிழர்கள் மீது ஏவப்படும் தொடர் வன்முறை
உலகத் தமிழர்களை உசுப்பிவிட்ட சிங்களம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசுஇன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது.விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கிகைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள்செய்கிறார்கள்நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது.

கவெண்ட்ரி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்

கவெண்ட்ரி  ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் 
COVENTRY   SHRI  SIDHI   VINAYAGAR    DEVASTHANAM
மகா கும்பாபிஷேகம்
            காணொளிகள்

02 july 2012  to  08 july 2012



http://www.youtube.com/watch?v=IwKxvGcEmCU

Wednesday 11 July 2012

தளி சட்டமன்ற உறுப்பினரும் அவரது ஆட்களும் நடத்தும் கொடூர படுகொலைகள்!


தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் கருத்துரிமைகளை மறுத்து கொத்தடிமைகளாக மிரட்டி ஒடுக்கி வைத்திருந்த தளி சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத் திமிரை எதிர்த்து நின்ற கழகத் தோழர் பழனி சுடப்பட்டு, வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை ஏற்க முடியாது – மகிந்த ராஜபக்ச



வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எனது அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றியதுடன், 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் தயாராக இருந்தேன்.
13வது திருத்தத்துக்கு அப்பால் என்பது செனெட் சபையை உருவாக்குவதாகும்.
செனெட் சபை உருவாக்கம் உள்ளிட்ட ஒரு தீர்வு நாடாளுமன்றத்தில் இருந்தே வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முக்கியமானது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த இன்னும் ஒரு ஆண்டு தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோமா நிலையில் உள்ள கைதி கைதானதன் பின்னணி!



அண்மையில் மகர சிறைச்சாலையில் தாக்குதல் சம்பவத்தின் போது கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ராகம வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் கால்களும்,கைகளும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முத்துராசா டில்ருக்ஷன் என்ற இளைஞன் கடந்த 05 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது மகன் என மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த முத்துராசா றீசா என்ற தாய் தெரிவித்தார்.குறித்த தாய் தனது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 12 பேருடன் நேற்று திங்கட்கிழமை (09-07-2012) காலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரையும் சந்தித்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறும் அவரின் விடுதலைக்கு ஆவன செய்யுமாறும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.