Translate

Saturday 28 July 2012

சிறுபான்மையினருக்கு ஒருபோதும் இனவாத அரசு தீர்வினை வழங்கப் போவது இல்லை! - பா. அரியநேத்திரன்



  • seithy.com gallery news 
  • seithy.com gallery news 
  • seithy.com gallery news
  • seithy.com gallery news 
  • seithy.com gallery news 
  • seithy.com gallery news
  • கல்முனையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் முதலாவது பிரசாரம் இன்று அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் ஆரம்பமானது. இப் பிரசாரக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்............. read more 

    பாதுகாப்பு வழங்க பிரித்தானியா மறுத்ததை அடுத்து, லண்டன் விஜயத்தை ரத்துச்செய்தார் மகிந்த!!


    லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்ததை அடுத்து, அவரின் லண்டன் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிய வருகின்றது.

    புதிய ஆண்டின் நிர்ப்பந்தம்?

    2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறைசாற்றியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதிலுள்ள பரிந்துரைகளைக்கூட நிறைவேற்றமாட்டோம் என்ற சிறிலங்கா ஆட்சியாளர்களின் பிடிவாதம், எதிர்பார்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஜ.நா மனித உரிமை சபையின் கூட்டம் போன்ற விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, பலவீனமான நிலையில் தொடரும் தாயக மக்களின் வாழ்க்கைக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை முன்னிலைப்பபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் சுமந்து, இந்த ஆண்டு பிறக்கின்றது.

    பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்

    லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான இன்று ஒலிம்பிக் விளையாட்டரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

    தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம்: திருமாவளவன்


    தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம்: திருமாவளவன்
    தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று குடியாத்தத்தில் தொல்.திருமாவளவன் கூறினார்.
    டெசோ அமைப்பில் ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் அதில் தனி ஈழம் வலியுறுத்தப்படுகிறது. அதற்காகவே டெசோ அமைப்பில் உள்ளோம். 

    கிழக்கு, சப்ரகமுவ தேர்தல் குறித்து இவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்களேன்..

    கிழக்கு, சப்ரகமுவ தேர்தல் குறித்து இவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்களேன்..கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களாக கிழக்கும் சப்ரகமுவவும் காணப்படுகின்றன. கிழக்கில் பூர்வீகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதுடன் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களுடன் தொடர்புடைய தமிழர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

    ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!


    ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். 

    இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இந்தியா அரசபயங்கரவாதம்,

    இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இந்தியா அரசபயங்கரவாதம், 

     
    இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். ஆஸ்திரே லியாவில் இந்தியர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அலறும் இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத் தியிருக்கிறது ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம்.

    முள்ளிவாய்க்கால் அழிவில் இந்திய ஆதரவுக்கு கேரள மாபியா நாராயணனே காரணம்: விக்கிலீக்ஸ்


    விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு இந்தியா ஆதரவளிக்க அன்றைய இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனே பிரதான காரணம் என்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

    விடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?

     
    தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கா ஒரு இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    Friday 27 July 2012

    லண்டன் மாநகரில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் போராட்டம் (படங்கள்)


    லண்டன் ஒலிம்பிக் போட்டியின்  ஆரம்ப விழா நடைபெறும் வேளையில்,  நூற்றுக் கணக்கான நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், வீர, வீராங்கணைகள், உலகப் பிரமுவர்கள் என பலர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், அவர்களின் கவனத்ததை ஈர்க்கும் வகையில் பெரும் திரளான புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் லண்டன் மாநகரின் வீதியின் இருமருங்கிலும் நின்று  சிறீலங்கா அரசுக்கான எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன், மனித நேயன் கோபி சிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தியும் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்................  read more

    தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு கன்னட உருது மொழியை

    தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு கன்னட உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்...பேச்சு மொழியை எந்த மொழியினரும் கைவிடவில்லை...சாதியம் போல் மொழியும் அழியாது...எங்கு பிறப்பினும் தமிழன்....தமிழனே....இங்கு பிறப்பினும் அயலான் அயலானே

    தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.


     1985 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவு அமைப்பினை (டெசோ) மறுபடியும் தூசி தட்டிக் கையிலெடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி.

    இந்தியாவில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை இந்த முறை இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தமிழீழக் கோரிக்கை அச்சுறுத்தலாக அமையுமென்ற புதிய குற்ற சாட்டை இந்தியா கூறியுள்ளது .

    இலங்கையில் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!- எச்சரிக்கிறார் எரிக் சொல்ஹெய்ம்

    இலங்கையில் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!- எச்சரிக்கிறார் எரிக் சொல்ஹெய்ம்
     28 07 12
    இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் எச்சரித்துள்ளார்.

    அவர், நோர்வே நாட்டின் "ஆஃப்டன்போஸ்டன்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இலங்கையில் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சினையே காரணமாக இருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

    ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்-


    ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்- 
    வடக்கில்  குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடங்கல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் (27.07.12) எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்திருந்த அழைப்பின் பேரில் உருவான இந்தப்  பேரணி வேகன்ந்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதி வழியாக, லேக்ஹவூஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலகத்திற்குச் செல்லமுயன்ற போது பொலீஸார் இரும்பு வேலிகளை இட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.

    சிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையும் கோஃபி அனனின் ஆறு அம்சத் திட்டமும் - வேல் தர்மா

    எமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எமக்கு சட்ட ஆலோசனை வழங்கியவர் தலைமை தாங்கி நடாத்துவார் என்றோ எனக்கு நிதி திரட்டியவர்கள் தலைமை தாங்கி நடாத்திச் செல்வர் என்றோ அல்லது என்னுடன் இருந்த போராளிகள் ஐரோப்பா சென்று வழிநடத்துவர் என்றோ தேசியத் தலைவர் கூறவில்லை. புலம் பெயர்ந்து வாழும் இளைய தலைமுறையினர் தொடர்ந்து நடாத்துவர் என்று அவர் கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

    சிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையும் கோஃபி அனனின் ஆறு அம்சத் திட்டமும் - வேல் தர்மா

    அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முனைகிறது சிறிலங்கா - சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு

    போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம் என்ற சிறிலங்கா அரசின் செயல் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் நிராகரித்துள்ளார்.

    "இது அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை.

    லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

    லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
    27 07 12  
    லண்டனில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இனவெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டிய காலத்தை பிரித்தானியத் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர்.

    Thursday 26 July 2012

    இந்தியச் சிங்கள இனவெறிக் கூட்டுச்சதியின் கொடும் இன அழிவிற்கு பிறகும் இன்னும் இந்தியத்தின் வக்கிறம் தீரவில்லை.

    தமிழகத்தில் இருப்பது அகதி முகாம்கள் அல்ல அவலச் சிறைக்கூடம். 
    ஈழத்தாய் என சொறிதலுக்காக புகழாரம் செய்யப்பட்ட ஜெ நினைத்தால் ஒரே நாளில் இந்த அவலநிலை மாறிவிடும்தான். ஆனால் தன்னை அறியனை ஏற்றிய தமிழக அப்பாவித்தமிழர்கள் மேலேயே ஜெ வுக்கு அக்கறை இருந்ததில்லையே! 

    இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட - அணிதிரண்டுவாரீர்*******

    இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட - அணிதிரண்டுவாரீர்*******
     

    அன்பான ஐரோப்பியவாழ் தமிழீழ உறவுகளே! எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள்.
    இதில் சிறீலங்கா இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார். உலகின் 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இலண்டன் Aspen Way E14 என்னும் வீதிவழியாக ஊர்தியில் சென்று ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

    உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது


    லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை லண்டன் வர இருப்பதாக பிரித்தானியாவின் "The Independent " நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
    இந்நிலையில், அவரது வருகையினை எதிர்த்து Aspen வீதிலுள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன ஒன்றுகூடலில், பிரித்தனியாவின் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


    இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    லண்டனில் நாளை பாரிய போராட்டம் என அறிவிப்பு !

    ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள நாளை லண்டன் வரும் மகிந்தருக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்த தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அறியப்படுகிறது. பிரித்தானியாவில் இயங்கும் மக்கள் அமைப்பான TCC இப் போராட்டத்துக்கான அனுமதியைப் பொலிசாரிடம் இருந்து பெற்றுள்ளது.

    பெரும் ஆதரவினை திரட்டி சிவந்தனின் போராட்டத்தை வெற்றி பெற வையுங்கள்- நெடுமாறன் ஐயா. (காணொளி)


    பெரும் ஆதரவினை திரட்டி சிவந்தனின் போராட்டத்தை வெற்றி பெற வையுங்கள்- நெடுமாறன் ஐயா. (காணொளி)


    இன்றும் சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்கள் மத்தியில், தன்னை வருத்தி தமிழின உரிமைகளுக்காய் தாகமிருக்கும் மனிதநேய பணியாளன் திரு கோபி சிவந்தன் அவருக்கு புலத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் அனைத்து உறவுகளும் பெரும் ஆதரவினை திரட்டி அவரின் இலட்சியத்தில் அவர் முழுமையாக வெற்றி பெற வைப்பது அனைத்து தமிழ் மக்களின் இன்றைய முக்கிய கடமையாகும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் ஐயா வேண்டுகோள் விடுத்துள்ளார்

    கைதிகளின் விடுதலையை கோரும் பகிரங்க மனு கையெழுத்திடும் இயக்கம் நாளை! ஆதரவளிக்க கோருகிறார் மனோ கணேசன்!!


    அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும்  பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம்,  மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் நாளை கொழும்பில் ஆரம்பிக்கப்படுகிறது. நாடு முழுக்கவும் முன்னெடுக்கப்படவுள்ள  இந்த இயக்கத்திற்கு மக்கள் கண்காணிப்பு குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.
    நாளை 27ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு  கொழும்பு  புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பமாகும் நிகழ்வில் அனைத்து தமிழ் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள்-நண்பர்களும்,  மக்கள் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு மனுவில் கையெழுத்திட வேண்டுமென மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளரும்,  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான  மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

    போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்கிய மெல்பேர்ண் (அ)சிங்கத் தமிழர்கள்(படங்கள்)

    தமிழின இன அழிப்பின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான முன்னாள்  போர்க்குற்றவாளியும் இந்நாள் ஒஸ்ரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவருமான திஸ்ஸர சமரசிங்கை   மெல்பேர்ண்ணைச் சேர்ந்த (அ)சிங்கத் தமிழர்கள் சிலர் சந்தித்துள்ளனர்............  read more 

    மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு


    மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு 

    லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை லண்டன் வர இருப்பதாக பிரித்தானியாவின் “The Independent ” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
    இந்நிலையில், அவரது வருகையினை எதிர்த்து Aspen வீதிலுள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன ஒன்றுகூடலில், பிரித்தனியாவின் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் இராணுவத்தினரால் கைது



    ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும்,இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார்.
    இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

    Wednesday 25 July 2012

    ஐ.நாவுக்கு வாக்குமூலம் வழங்கியவரை இலங்கையிடம் ஒப்படைக்க அவுஸ்.முயற்சி


    தஞ்சம் வழங்குவது இப்படித்தானா? - ஏக்கத்தில் உறவுகள்

    (சிட்னி) கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இராணுவத்தின ரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தற்போது அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ் திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆட்கடத்தல் மோசடிக்காரர்களிடம் உயிரை மாய்க்கும் வெளிநாட்டுப்பயணம் - வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு.

    ஆட்கடத்தல் மோசடிக்காரர்களிடம்  உயிரை மாய்க்கும் வெளிநாட்டுப்பயணம் - வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு.

    T-Selvarany-selvi-Punkudutivu01.jpgஇலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து மோசடி செய்வோரின் செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் கடந்த வருடம் தன்சானியாவில் தற்கொலை செய்துகொண்ட யுவதி ஒருவரது புகைப்படமும் மேலதிக விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

    தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியும் முஸ்லீம்கள்- துண்டு பிரசுரம்

    காக்கை வன்னியன் கருணாவும் மகிந்தவின் மகனும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தமிழ் பெண்களை முஸ்லீம்கள்திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் படுவான்கரையின் பல கிராமங்களில் விநியோகிக்கப்படுகிறது..................  read more 

    மூன்றாவது நாளாகத் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்!



    லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் ஸ்ரற்போர்ட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கறுப்பு ஜுலை நினைவுப் பேரணியை தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி அவர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளையடைந்தது.

    புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டும் கருணா!


    இலங்கையில் அல்லலுறும் தமிழர்களுக்கு ஒரு வீட்டைக்கூட புலம்பெயர் தமிழர்கள் கட்டிக்கொடுக்கவில்லை என்று கருணா சாடியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள சில அமைப்புகள் மட்டுமே வட கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு வீடுகளையும் சில வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது என்று அவர் குறிபிட்டுள்ளார்.

    மாற்று உடையில் சென்னை ஊடாக கொல்கத்தா சென்ற சிங்கள விமானப்படையினர்!


    இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!


    கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!! 
    கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

    சென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ தடம் புரண்டுவிட்டது


    அனலை நிதிஸ் ச. குமாரன்
    1985-ஆம் ஆண்டில் டெசோ என்கிற தமிழீழ ஆதரவு அமைப்பை உருவாக்கினார் கலைஞர் கருணாநிதி. வீரமணி மற்றும் நெடுமாறன் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்த அமைப்பில் அவர்களுக்கு அறியப்படுத்தாமலேயே அவ் அமைப்பை கலைத்தார் கலைஞர். தமிழீழ ஆதரவு நிலை இந்தியாவில் உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் செயற்படாமல் இருந்த டெசோ சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக கூறிய பின்னர் மீண்டும் டேசோவை உயிர்ப்பித்தார் கலைஞர்.

    இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை ??????


    இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

    இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்

    பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் _


      குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிமலரூபனின் திருவுடலுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி


    வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின், கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடலுக்கு த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்; கண்டும் காணாமலுள்ள திணைக்களங்கள்


    யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்; கண்டும் காணாமலுள்ள திணைக்களங்கள்
    news
    யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனோடு இணைந்து சிங்கள மொழியும் வருகை தந்துள்ளமை  அனைவரும் அறிந்ததே

    யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவங்களின் பெயர்பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே

    கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபிக்கவும் அரியநேத்திரன் எம்.பி. வேண்டுகோள்


    கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபிக்கவும் அரியநேத்திரன் எம்.பி. வேண்டுகோள்
    news
    அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எனவே, தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழினத்தின் பலத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித் துக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     
    இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

    கிழக்கில் தமிழ் மக்கள் தங்களது முழுமையான வாக்குப் பலத்தை காட்டவேண்டும்: த.தே.கூட்டமைப்பு


    தமிழ் மக்கள் கடந்த காலத்தைபோல் அல்லாமல் நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முழுமையாக தங்களது வாக்குப் பலத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இனப்படுகொலையாளிகளை இலண்டனிலிருந்து விரட்டுவோம்! - அணிதிரண்டு வாரீர்!


    எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 ற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள். இதில் இலங்கை இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார்.

    பௌத்த பிக்குகளின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டது பள்ளிவாசல்!


    பௌத்த பிக்குமாரின் ௭திர்ப்பினாலும் அச்சுறுத்தலினாலும் குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் நேற்றிரவு மூடப்பட்டுவிட்டது.
    நீண்டகாலமாக பௌத்த பிக்குமார் குறித்த பற்றிவாசலுக்கு ௭திர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையம் விடுத்து வந்துள்ள நிலையில், திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர்.

    நல்லூர் கொடியேற்ற திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் தங்க நகைகள் திருட்டு


    நல்லூர் கொடியேற்ற திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் சுமார் ஐந்து லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலயத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு உளவுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கொல்கத்தா சென்ற சிறிலங்கா படையினர்


    இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டே சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் மாற்று உடையில் சென்னை ஊடாக கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஜெட் எயர்வேய்ஸ் விமானம் மூலம் கொழும்பில் இருந்து சென்னை வந்த இவர்கள், அங்கிருந்து காலை 6.30 மணியளவில் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
    சிறிலங்காப் படையினரின் பயணங்களை, சென்னை விமான நிலையத்தில், கியூ பிரிவு காவல்துறையினரும், தமிழ்நாடு உளவுத் துறையினரும், தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இதனால், மாற்றுஉடையில், சிறிலங்காப் படையினர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர்.
    அவர்கள் கொல்கத்தா சென்ற பின்னரே, தமிழ்நாடு உளவுப்பிரிவுக்கு இந்த விபரம் தெரியவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழினத்தினுடைய துயர அடையாளமாகவே பிள்ளையான்


    பிள்ளையான் ஒரு மறக்கப்பட்ட மனிதர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்தினுடைய துயர அடையாளமாக பிள்ளையான் விளங்குகிறார். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாடியுள்ளது.

    இந்தியாவின் தேவைக்கேற்ப கிழக்கில் முதலமைச்சர்


    இந்தியாவின் தேவைக்கேற்ப கிழக்கில் முதலமைச்சர் ஒருவரை கிழக்கில் நியமிப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது ௭னத் தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கிழக்கில் தலைதூக்கியுள்ள ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

    இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை


    எங்களது இழந்த இறைமையை மீட்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட்டதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    வடக்கில் இருந்து படைகளை அகற்ற முடியாது மகிந்த தம்பி


    வடக்கு, கிழக்கில் குற்றச் சம்பவங்களில் படையினர் ஈடுபடுவதாக எழுப்பப்படும் குற்றச் சாட்டுகளை நேற்று திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவ்வாறான சூழ்நிலையில் அங்கு படைமுகாம்களை அகற்றுவதற்கோ, படைக்குறைப்பு செய்யவோ தேவையேற்பட வில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

    பிரபாகரன் திருமண நாளில் என் திருமணம் நடக்கும்! – சீமான்


    தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் தேதி என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

    சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனுக்கு இரங்கற் செய்தி


    தமிழ் மக்களின் ஆன்மாவின் வடுவாக, சிங்கள இனவெறியின் அதிகோர முகத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக, அமைந்த யூலைப் படுகொலைகள் தமிழர்கள் வாழ்வில் கறுப்பு நாளாகப் பதிந்து போனது.