Translate

Saturday 22 September 2012

”Maamannan Elengeswaran” – Book release in UK


Venue : Shri Kanaga Thurkkai Amman Temple , 5 Chapel Road, London, W13 9AE.
Date : 23rd September 2012
Time : 4.00 pm  to  8.00 pm.

Friday 21 September 2012

இறைச்சி வடிவில் ஒரு "எமன்"


40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுகலை பாதித்து உடல்செல்கலை அபரிமிதமான வளர்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும்இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது விளைவு குறைந்த ஆயுள்).இளம் வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்
வாக்சின் போடப்படுகிறது.

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!


உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர்
...
ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!


கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!

இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit )
 
நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

மாரடைப்பை தவிர்க்க ..


மாரடைப்பை தவிர்க்க ..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

Thursday 20 September 2012

இனப்படுகளையாளி மகிந்தவுக்கு எதிராக வைகோ தலைமயில் ஆர்ப்பாட்டம். (படங்கள்)


இனப்படுகளையாளி மகிந்தவுக்கு எதிராக வைகோ தலைமயில் ஆர்ப்பாட்டம். (படங்கள்)



வைகோ உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுதும் சாலையிலேயே, கொட்டும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வைகோ உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுதும் சாலையிலேயே, கொட்டும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வைகோ உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்துவரும் மத்தியபிரதேச Bad Chicholi பகுதியில் உள்ள கிராம மக்கள் இராஜபக்ஷ செய்த கொடுமைகளை மதிமுக தொண்டர்கள்  கொண்டு சென்ற படங்கள் மூலம் பார்த்து  மகிந்தவின்  முகம் தாங்கிய பேனர்களை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை இனப்படுகளையாளி  மகிந்தவுக்கு  பதிவுசெய்துள்ளார்கள்.. அந்தப்பகுதி பொது மக்கள் வைகோ-வை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்..

அரசியல் விபச்சாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ்: சஜித் பிரேமதாஸ.


அரசியல் விபச்சாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ்: சஜித் பிரேமதாஸ.


இலங்கையில்  அரசியல் விபசாரம் நடக்கின்றது. அதனை முஸ்லிம் கங்கிரஸ் இப்போது கெட்டியாக பின்பற்றுகின்றது. இவ்வாறு தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு விபசார அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் இலங்கையில் தீவிரமாக பின்பற்றுகின்றது என்றே கருத முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வை வழங்க அழுத்துவார் மன்மோகன்?

அரசியல் தீர்வை வழங்க அழுத்துவார் மன்மோகன்?
news
 இனப்பிரச்சினைக்குச் சாத்தியமான அரசியல் தீர்வு காணுமாறு, புது டில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதவுரிமை ஆணைக்குழுப் பிரதிநிதிகள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு


news
இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் இன்றையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

மு.கா.அரசுடன் இணைந்தமை பிரதேச பாரம்பரியத்துக்கு அச்சுறுத்தல்: விஜயசந்திரன்


கிழக்கு மாகாணமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருப்பதானது பாரம்பரிய பிரதேச தன்மையினை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் மு.கா. காட்டிக்கொடுத்துவிட்டது: ரணில்

ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் மு.கா. காட்டிக்கொடுத்துவிட்டது: ரணில்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் வரப்பிரசாதங்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளது. கட்சியின் கொள்கை வழிகாட்டியான குர்ஆனையும் ஹதீஸையும் புறம் தள்ளி விட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று மஹிந்த சிந்தனையையே பின்பற்றி வருகின்றார் ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொங்கு தமிழ் நிகழ்வுக்கு தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு செ.கஜேந்திரன் அழைப்பு - செவ்வி


தாயகத்தில்  முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த  செ.கஜேந்திரன் அவர்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும்" எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார். எதிர்வரும் 22 .09 .2012 அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் . 


இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை: புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன்.

Posted Image'இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார்.

இல‌ங்கை தூத‌ரக‌த்தை நாளை மு‌ற்றுகை‌யிடு‌கிறா‌ர் திருமாவளவ‌ன்

ராஜபக்ச‌வி‌ன் இ‌ந்‌திய வருகைக்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்து இலங்கை தூதரகத்தை நாளைமுற்றுகையிட‌ப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பவுத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.

பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்றதமிழர்கள் இலங்கைக்கு விரட்டியடிப்பு

பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்ற, தமிழர்கள் 50 பேர், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, வீடுகளை இழந்த ஏராளமான தமிழர்கள், மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். போதுமான வசதி இல்லாததால், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே, இலங்கையிலிருந்து சமீபத்தில், 50 பேர் பிரிட்டனில் தஞ்சம் அடையச் சென்றனர். 

திருப்பதியில் விநாயகருக்கு 4116 கிலோ லட்டு காணிக்கை: முஸ்லீம் தொழில் அதிபர் வழங்கினார்


திருப்பதியில் விநாயகருக்கு 4116 கிலோ லட்டு காணிக்கை: முஸ்லீம் தொழில் அதிபர் வழங்கினார்
நகரி, செப்.20- 

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் ஷெரீப். தொழில் அதிபர் இவர். விநாயகர் மீது தீவிர பற்று கொண்டவர். ஆண்டு தோறும் திருப்பதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தும்முலகுண்டா பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தன்னால் முடிந்த காணிக்கைகளை செலுத்துவார். 

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை: புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன்.

'இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார்.

ஐ.நாவின் 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' பட்டியலில் இலங்கை


அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் எனும் ஐ.நாவின் புதிய பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 2011 முதல், ஜூலை 2012 காலவரை உள்ளடக்கிய ஐ.நாவின் இந்த அறிக்கை, தனிநபர்களுக்கு எதிரான பழிவாங்கும் நோக்குடனான செயற்பாடுகள் பதிவாகி வரும் புள்ளிவிபரங்களை கொண்டும் அரசு அதிகாரிகளாலும் உயர்மட்ட அதிகாரிகளினாலும் அச்சுறுத்தலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கபப்டும் செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் கொண்டும் தயாரிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

பள்ளிவாசல்களை உடைப்பதற்கு அரசாங்கத்துக்கு மு.கா. அங்கீகாரம்: முஜிபுர் ரஹ்மான்

பள்ளிவாசல்களை உடைப்பதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை நம்பி மோசம் போய்விட்டனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மேல் மாகா ணசபை உறுப்பினர் –முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளையடுத்து இலங்கையிலும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

Posted Image(படங்கள் உள்ளே) அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று, அம்பாறை, மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கான அழைப்பினை அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருந்தது.

ஐ.நா. வாசல் நோக்கி 5வது நாட்களாக வைகுந்தனின் கவனயீர்ப்பும் பொங்குதமிழ் பேரெழுச்சியும்


பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்றலில் இருந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாந்தநேயன் செல்வராசா வைகுந்தன் கடந்த 5 நாட்களாக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இன்றுவரை 413 Km களை கடந்துள்ளார்.

வல்வெட்டித்துறை இளைஞர் ஹொரவப்பொத்தானைக்கு கடத்தல்!


பெரும்பான்மை இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப்பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் அ.அனந்தராஜ் தெரிவித்தார்.

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக குரங்கார்!

Posted ImagePosted Imageஅழகுப் பெண்களும் கட்டழகான ஆண்களும் மட்டும்தான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரவேண்டுமா....? விலங்குகளும் கூட நிகழ்ச்சித் தொகுப்பாளராக முடியும் என்று காட்டியிருக்கின்றனர் என்.பி.சி சனல்காரர்கள்.

இன்று இரவு ராஜபக்சேவுக்கு விருந்து கொடுத்து உபசரிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !
டெல்லி: மத்திய பிரதேசத்தில் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைகழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள ராஜபக்சேவுக்கு இன்று இரவு விருந்து கொடுத்து உபசரிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக கட்சிகள் எல்லாம் கடுமையாக போராடியும், ஒரு உயிர் பறிபோன பின்னரும் கூட அதையெல்லாம் நிராகரித்து விட்டு இப்போது ராஜபக்சேவுக்கு விருந்தளிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்திருப்பது தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டனில் நாளை மாலை இந்திய தூதரகத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது !


லண்டனில் நாளை மாலை இந்திய தூதரகத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது !
மகிந்த ராஜபக்ஷ வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் அவர் தீக்குளித்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

கழுத்தில் சங்கிலியைக் கட்டி அதனை பஸ் சில்லுடன் பிணைத்து போராட்டம் !


கழுத்தில் சங்கிலியைக் கட்டி அதனை பஸ் சில்லுடன் பிணைத்து போராட்டம் !

இன்று மாலை 3.30 மணிக்கு PVT -030 என்னும் இலக்கமுடைய தனியார் விமானம் ஒன்றில், இலங்கைத் தமிழர்கள் ஏற்றப்பட்டு அவர்களை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா. அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இவர்களை திருப்பி அனுப்பவேண்டாம் எனக்கூறி, வெள்ளையின மக்கள் சிலர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

Tuesday 18 September 2012

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ.மஜீட் பதவிப் பிரமாணம்


கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சற்று முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக் கொண்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை சீனா 16ஒப்பந்தங்களில் கைச்சாத்து -கோபத்தில் இந்தியா !


இலங்கை வந்துள்ள சீனா நாட்டின் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவருக்கும் இலங்கையின் முக்கிய வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் பதினாறு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன .

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் திரைப்படத்தை தடை செய்க - சீமான் அறிக்

நபிகள் நாயகத்தை சிறுமைபடுத்தும் படத்தை அமெரிக்கா தடை செய்ய வேண்டும்நாம் தமிழர் கட்சி

இஸ்லாமிய மக்களால் போற்றுதலுடன் கடைபிடிக்கப்படும் குர் ஆனை அருளிய இறைவனின் தூதர் நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தும் ஒரு திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும்.

அப்துல் கலாம் ஒரு ஹிட்லர்

இன்று (17.09.2012) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.  இப்பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடர்பாக ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அப்துல் கலாமுக்கும் ஹிட்லருக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று கூறினார்.................. read more

தமிழ்மக்களின் முதுகெலும்பும் முறிகிறது.......


முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழர்களின் பலமாகவும், சர்வதேசத்தின்முன்னால் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பே, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்க வல்லது. 

ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி..

ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டம் : 
மத்திய பிரதேச மாநிலத்தில் பவுத்த கல்வி நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளனார். இதற்காக இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபேக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்று கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, வியாபாரத்திற்காக தொழிலதிபர்கள் குழு இலங்கை செல்லுகிறது.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, வியாபாரத்திற்காக தொழிலதிபர்கள் குழு இலங்கை செல்லுகிறது.  இந்த முதலாலிகள் தமிழ் மக்களிள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தங்கள் லாபத்துக்காக இலங்கை செல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், லாப வெறி பிடித்த இந்த தொழிலதிபர்களை நிறுத்தட்டும்....

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!


Posted Imageஉடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் மரணம்

Posted Image

சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜப‌க்சவு‌க்கு கரு‌ப்புகொடி கா‌ட்ட ம.‌பி. செ‌ன்றா‌ர் வைகோ

மத்திய பிரதேசத்துக்கு வரு‌ம் 21ஆ‌ம் தேதி வரு‌ம் இல‌‌‌ங்கை அ‌திப‌ர் ராஜபக்சவு‌க்கு கறு‌ப்பு கொடி கா‌‌ட்டுவத‌ற்காக தொ‌ண்ட‌ர்க‌ளுட‌ன் 15 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பேரு‌ந்துக‌‌ளி‌ல் ம‌.‌தி.மு.க பொது‌ச் செயல‌‌ர் வைகோ இ‌ன்று சா‌ஞ்‌சி புற‌ப்ப‌ட்டு செ‌ன்றா‌ர். 

ஈழ பிரச்சனை தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு


ஈழ பிரச்சனை தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு எந்த அளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய சான்று.. கீழிருக்கும் காணொளி பார்க்கவும்..

http://www.youtube.com/watch?v=xwX50JXETFo&feature=share 

தமிழர்களிடமிருந்து கிழக்கு மாகாணம்பறிபோகும் காலம்வெகுதொலைவிலில்லை


அனலை நிதிஸ் ச. குமாரன்
செப்டம்பர் 8-ஆம் தேதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்பல்வேறு விதமான ஊகங்களை வெளியுலகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதுஇத்தேர்தலானது கிழக்கு மாகாணம் என்பது மூவின மக்களையும் தன்னகத்தேகொண்டுள்ளது என்பதனையும்இவை கூடிவாழும் இனங்கள் எனபதனையும்உலகத்துக்கு எடுத்துக் காட்டவே நடத்தப்பட்டுள்ளது.

மகிந்தவை விசாரிக்கவேண்டும்: செல்வி ஜெயலலிதா ICC யிடம் மனுக்கொடுத்தார் !


இலங்கையில் கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள், தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்தப்படவேண்டுமென, வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சர்வதேச போர்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றில், நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் இந்தியரான தல்வீரை டெல்லியில் சந்தித்த ஆ.தி.மு.க வழக்கறிஞர்கள் மேற்படி மனுவைக் கையளித்துள்ளனர். இந்த உத்தரவை கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா பிறப்பித்ததாகவும் மேலும் அறியப்படுகிறது.

லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!


லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!
TNRF-Eastham-Thileepan-Nikalvu170912-01.jpg
தியகதீபம் லெப்ரினன் கேனல் திலீபன் அவர்களின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி லெப்ரினன் கேனல் திலீபன் அவர்கள் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து 12 நாட்களாக அவர் நடாத்திய தியாகப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று (17.09.2012) அவருக்கான வணக்க நிகழ்வுகள் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள ட்றினிட்றி சென்ரரில் நடைபெற்றது. 

Monday 17 September 2012

ராஜபக்சே வருகையை கண்டித்து


கொடும்கோலனின் இந்திய வருகையை எதிர்த்து தீக்குளித்த சேலத்து இளைஞன் தமிழக உறவுகளே மறுபடியும் சொல்லுவதை கேளுங்கள் தயவு செய்து இபடியான செயல்ப்பாட்டை கைவிடுங்கள் எங்களுக்கான நாடு கிடைக்கும் எங்கள் போராட்ட வடிவம் மட்டும் தான் மாறி இருக்கு இந்த சகோதரனின் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கின்றேன்.

தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்! தீக்குளித்த விஜயராஜ் நக்கீரனுக்கு பேட்டி!

http://www.youtube.com/watch?v=iCjqXIS2tHY&feature=player_embedded
 
தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்! தீக்குளித்த விஜயராஜ் நக்கீரனுக்கு பேட்டி!

http://youtu.be/iCjqXIS2tHY

தாமதத்திற்கு நாங்கள் காரணம் இல்லை; ஆட்சியை அமைப்பதற்கு காத்திருக்கும் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தான் காரணம்: ரவூப் ஹக்கீம்


கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகிவிட்டது. நாங்கள் அரசுடனும் - தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்தையில் ஈடுபட்டோம்.இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்தையில் ஈடுபட்ட வேளை நாங்கள் மூவின மக்களுக்கும் பொருத்தமான ஆட்சி கிழக்கில் அமைவதை வலியுறுத்திக் கூறினோம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து ஆட்சியை அமைக்க உதவுமாறு எங்களை கேட்டுக்கொண்டனர்...............  read more 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரை தாக்குவதற்கு துப்பாக்கியுடன் வந்தவர்களை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் வீட்டிற்கு நேற்று இரவு துப்பாக்கியுடன் இனம்தெரியாத இருவர் உட்பிரவேசிக்க முயற்சித்த இனம்தெரியாத இருவரை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். இதேவேளை தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் பொலிசாரே பொறுப்பு என த.கலையரசன் தெரிவித்தார்.................  read more 

27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் !


27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் !ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. 

நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :