Translate

Saturday 3 November 2012

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும்; இனவாதி குணதாச அமரசேகர

திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இனவாதியுமான குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். 

40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து

40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபருமான மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம்..

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது..

டெசோ தீர்மானங்கள் ஐ.நாவில்; ஈழத்தமிழர் வாழ்வில் மாற்றம் வரும்; கருணாநிதி நம்பிக்கை

news
டெசோ மாநாட்டின் தீர்மானங்கள் ஐ.நாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஈழத்தமிழர் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழும் என தி.மு.கவின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா

news
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு,  தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.

கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு

இவ் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் டொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் ‘நௌ’ சஞ்சிகை, ‘ரொரன்ரோவில் சிறந்தது’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

13வது சீர்திருத்தத்தை நீக்கினால் மகிந்த அரசிலிருந்து விலகுவேன்; பிரபா கணேசன் எச்சரிக்கை

13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவேன்என  ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; கண்டி மல்வத்தை பீடத்தின் ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை  எமது நாட்டுக்கு உகந்தது அல்ல நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணசபை முறை மற்றும் எமது நாட்டில் தற்போதைய தேர்தல் முறையும் எமக்கு உகந்தது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை அவசியம்...

Posted Imageஜெனிவாவில் நடந்து வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மறுஆய்வு கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.   
இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:

இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி


இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியார்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியர்ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதன் விவரம் பின்வருமாறு : செய்தியாளர் :- ஐ.நா. சபையில் தளபதி ஸ்டாலின் தாக்கல் செய்த  மனு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க முடியுமா?

உறுதிமொழிகள் நிறைவேற்ற தவறின் அபாயப்பொறி நிச்சயம் - அமெரிக்கா!

http://www.uyarvu.com/images/stories/uyarvu-image/america.jpgசிறீலங்கா வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச்மாதத்தில் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் அபாயப் பொறி நிச்சயம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் சிறீலங்காவை மண்டியிட வைத்த அமெரிக்கா தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் சிறீலங்கா மீது அழுத்தங்களை கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு!- தீர்ப்பு ஒத்திவைப்பு


விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்!


சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்! வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும்ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை,திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.

உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....


உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....சிலர் உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால்குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால்அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள்கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல்தோல்வியை தான் சந்திப்பர்.